காது சிகிச்சைக்குப் போய் கை போனது; திருமணமும் நின்றது

காது சிகிச்சைக்குப் போய் கை போனது; திருமணமும் நின்றது

1 mins read
ed84b8fd-a183-43c1-a8ba-1fda0f783239
காது சிகிச்சைக்குப் போய் கையை இழந்துவிட்ட ரேகா தன் வீட்டில் எப்போதும் அழுத படியே கவலையில் ஆழ்ந்துவிட்டார். படம்: இந்திய ஊடகம் -

பாட்னா: பீகா­ரில் மகா­வீர் ஆரோக்­கிய சன்ஸ்­தான் என்ற மருத்­து­வ­மனை­யில் காது சிகிச்­சைக்­காக சென்ற இளம்­பெண், தாதி ஒரு­வரின் அலட்சி­யத்­தால் கையை இழக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டு­விட்­டது.

ரேகா என்ற இந்­தப் பெண், ஜூலை மாதம் 11ஆம் தேதி காது அறுவை சிகிச்­சைக்­குச் சென்­ற­தா­க­வும் ஆனால் ஒரு தாதி அவ­ருக்கு நரம்­புக்­குப் பதி­லாக சுத்த ரத்­தம் ஓடும் குழா­யில் ஊசி மருந்தை ஏற்­றி­விட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் ரேகா­வின் கை கொஞ்­சம் கொஞ்­ச­மாக பச்சை நிறத்­தில் மாறி­யதை அடுத்து, அது பற்றி மருத்­து­வ­ரி­டம் கூறி­ய­தா­க­வும் ஆனால், மருத்­து­வர்­கள் சிகிச்சை அளிக்க மறுத்­து­விட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கடை­சி­யில் இவர் இடதுகையை இழக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டு­விட்­டது. இத­னால் அடுத்த மாதம் சிறப்பாக நடக்­க­வி­ருந்த ரேகாவின் திரு­ம­ண­மும் நிறுத்­தப்­பட்­டது.

காவல்­து­றையை அணுகி புகார் கொடுக்­கச் சென்­ற­போது அதி­கா­ரி­கள் அலட்­சி­ய­மாக இருந்­ததை அடுத்து ரேகா­வின் குடும்­பத்­தி­னர் நீதி­மன்­றத்தை நாடி உள்ளதாக ஊட­கங்கள் கூறின.