கேரள பள்ளிகளில் பருவநிலைப் பயிலகங்கள் அமைக்க திட்டம்

கேரள பள்ளிகளில் பருவநிலைப் பயிலகங்கள் அமைக்க திட்டம்

1 mins read
ec34ab4f-05e6-412e-a4af-82d647612739
-

கொச்சி: பரு­வ­நிலை மாற்­றம் காரண­மாக மனித வாழ்க்­கைக்கு முன் ஒரு­போ­தும் இல்­லாத அளவுக்குப் பிரச்­சி­னை­கள் ஏற்­படும் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

வருங்­கா­லத்­தி­லும் அத்­த­கைய பிரச்­சி­னை­கள் அதி­க­ரிக்­கும் என்றும் கணித்து கணிக்­கப்­பட்டு இருக்­கிறது.

இந்­தச் சூழ­லில் இந்­தி­யா­விலேயே முதன்­மு­த­லாக கேர­ளா­வில் பள்­ளிக்­கூ­டங்­களில் புத்­தாக்­கத்­தைப் பயன்­ப­டுத்தி பரு­வ­நிலைப் பயி­லகங்­களை அமைக்க அர­சாங்­கம் முடிவு செய்து இருக்­கிறது.

கேரள முதல்­வ­ரின் 100வது நாள் செயல்­திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக பொதுக் கல்­வித் துறை பள்­ளிக்­கூ­டங்­களில் அத்­த­கைய பயிலகங்களை அமைக்­கப்போவதாக அறி­வித்து இருக்­கிறது.

அதன்­படி, மாநி­லத்­தில் 258 பள்­ளிக்­கூ­டங்­களில் பரு­வ­நிலைப் பயிலகங்கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன என்று கல்­வித் திட்ட அமைப்­பின் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.