கொச்சி: பருவநிலை மாற்றம் காரணமாக மனித வாழ்க்கைக்கு முன் ஒருபோதும் இல்லாத அளவுக்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது.
வருங்காலத்திலும் அத்தகைய பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றும் கணித்து கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தச் சூழலில் இந்தியாவிலேயே முதன்முதலாக கேரளாவில் பள்ளிக்கூடங்களில் புத்தாக்கத்தைப் பயன்படுத்தி பருவநிலைப் பயிலகங்களை அமைக்க அரசாங்கம் முடிவு செய்து இருக்கிறது.
கேரள முதல்வரின் 100வது நாள் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுக் கல்வித் துறை பள்ளிக்கூடங்களில் அத்தகைய பயிலகங்களை அமைக்கப்போவதாக அறிவித்து இருக்கிறது.
அதன்படி, மாநிலத்தில் 258 பள்ளிக்கூடங்களில் பருவநிலைப் பயிலகங்கள் அமைக்கப்படுகின்றன என்று கல்வித் திட்ட அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.