தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறார் புற்றுநோய் மரணங்கள் அதிகம்: பல்வேறு காரணங்கள்

1 mins read
cd3553a7-769c-4ec4-a9e7-1822b236ab79
-

புது­டெல்லி: பிரிட்­டன், கனடா போன்ற வளர்ந்த நாடு­க­ளு­டன் ஒப்பி­டு­கை­யில் இந்­தி­யா­வில் புற்­று­நோய் கார­ண­மாக மர­ண­ம­டை­யும் சிறார்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கிறது.

தாம­த­மாக நோயைக் கண்­ட­றி­வது; போது­மான சிகிச்சை இல்­லா­தது; தேர்ச்­சி­யுள்ள ஊழி­யர் பற்­றாக்­குறை; படுக்­கை­கள் இல்­லாத நிலை; சாத­னங்­கள் இல்­லாத நிலவரம் ஆகி­யவை இதற்­கான கார­ணம் என்று பரந்த அள­வில் முதன்­மு­த­லாக நடத்­தப்­பட்ட ஓர் ஆய்வு தெரி­விக்­கிறது.

இந்­திய மருத்­துவ ஆய்வு மன்­றத்­தின்­கீழ் செயல்­படும் தேசிய நோய்த் தக­வல் ஆய்வு நிலை­யம் அந்த அறிக்­கையை உலக சுகா­தார நிறு­வ­னத்­து­டன் சேர்ந்து வெளி­யிட்டு உள்­ளது.

இந்­தி­யா­வில் புற்­று­நோய் கார­ண­மாக மர­ண­ம­டை­வோ­ரில், 14 வரை வய­துள்ள சிறார்­க­ளின் எண்­ணிக்கை 4% ஆக இருக்­கிறது என்று அறிக்கை தெரி­விக்­கிறது.

அறிக்கை 26 மாநி­லங்­க­ளை­யும் நான்கு யூனி­யன் பிர­தே­சங்­க­ளை­யும் உள்­ள­டக்கி தயா­ரிக்­கப்­பட்டு உள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.