தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய குடிமக்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் ஒப்படைப்பு

2 mins read
c2cbe778-15ae-44d3-89ad-eaf60ff0f4a8
-

மும்பை: சுவிட்­சர்­லாந்து வங்­கி­களில் கணக்கு வைத்­துள்ள இந்­தி­யர்­கள் பற்­றிய விவ­ரங்­களை அந்­நாட்டு அரசு இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைத்துள் ளது. கடந்த நான்கு ஆண்­டு­களில் நான்­கா­வது முறை­யாக இந்த விவ­ரங்­கள் இந்­திய அர­சி­டம் அளிக்­கப்­பட்­டுள்­ளன.

சுவிட்­சர்­லாந்து வங்­கி­களில் இந்­திய குடி­மக்­கள் ஏரா­ள­­மா­னோர் ரக­சி­யக் கணக்­கு­கள் தொடங்கி பல்­லா­யி­ரம் கோடி ரூபாய் கறுப்­புப்­ப­ணத்­தைப் பதுக்கி வைத்­தி­ருப்­ப­தாக நீண்ட கால­மா­கக் கூறப்­பட்டு வரு­கிறது.

இதை­ய­டுத்து, கறுப்­புப்­ப­ணப் புழக்­கத்­தால் இந்­தி­யா­வைப்போல் மேலும் பல நாடு­கள் பாதிக்கப்பட்டன. அந்­நா­டு­கள் கொடுத்த அழுத்­தம் கார­ண­மாக சுவிட்­சர்­லாந்து வங்­கி­களில் கணக்கு வைத்­துள்ள வெளி­நாட்­ட­வர்­கள் குறித்த விவ­ரங்­களை சம்­பந்­தப்­பட்ட நாடு­க­ளி­டம் பல்­வேறு கட்­டங்­க­ளாக ஒப்­ப­டைக்க சுவிட்­சர்­லாந்து முன்­வந்­தது.

அதன்­படி, கடந்த 2019ஆம் ஆண்டு முதல், இந்­தி­யர்­க­ளின் வங்­கிக் கணக்கு விவ­ரங்­களை அந்­நாட்டு அரசு படிப்­ப­டி­யாக இந்­தி­யா­வி­டம் அளித்து வரு­கிறது.

தற்­போது நான்­கா­வது முறை­யாக அளிக்­கப்­பட்­டுள்ள கோப்­பு­களில் பல முக்­கி­யப் புள்­ளி­கள், முன்­னணி நிறு­வ­னங்­கள் தொடர்­பான விவ­ரங்­கள் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

குறிப்­பாக தென்­கி­ழக்கு ஆசிய நாடு­களில் குடி­யே­றிய வெளி­நாட்­டு­வாழ் இந்­தி­யர்­கள், அர­சி­யல்­வா­தி­கள், முந்­தைய அரச குடும்­பத்­தி­னர் ஆகி­யோ­ரின் பெயர்­கள் நான்­கா­வது கோப்­பில் இடம்­பெற்­றுள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

"அவர்­க­ளைப் பற்­றிய விவ­ரங்­க­ளைக் கொண்டு, வரு­மான வரி ஏய்ப்பு நடந்­துள்­ளதா என ஆரா­யப்­படும்.

"ஒரு­வேளை வரு­மா­னத்தை மறைத்­தது தெரி­ய­வந்­தால் உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.

"வரி ஏய்ப்­புக்கு மட்­டு­மல்­லா­மல், சட்­ட­வி­ரோ­தப் பணப் பரி­மாற்­றம், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி­யு­தவி போன்ற குற்­றச் செயல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தால் நட­வ­டிக்கை பாயும்," என­வும் மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.