'சைவ' முதலைக்கு பொதுமக்கள் அஞ்சலி

'சைவ' முதலைக்கு பொதுமக்கள் அஞ்சலி

1 mins read
dc0c6066-2abe-4bf5-8dd3-df8d474e195d
இறுதி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள். படம்: ஊடகம் -

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் உள்ள கோவில் ஒன்­றில் வாழ்ந்­து­வந்த 'பாபியா' எனும் சைவ முதலை மடிந்­தது. அந்த முதலை கோவி­லில் வழங்­கப்­பட்ட சைவ பிர­சா­தத்தை மட்­டுமே உண்டு உயிர் வாழ்ந்­த­தால் கேர­ளா­வில் புகழ் பெற்­றது. முத­லைக்கு 75 வயது எனக் கூறப்­பட்­டது.

கேர­ளா­வின் காசர்­கோடு மாவட்­டத்­தில் உள்ள அனந்த பத்­மா­நாப சுவாமி கோவில் குளத்­தில் வாழ்ந்து வந்த முதலை மாண்­டு­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'பாபியா' என்று அழைக்­கப்­பட்ட அந்த முதலை கோவி­லில் வழங்­கப்­பட்ட சைவ பிர­சா­தத்தை மட்­டுமே உண்டு உயிர் வாழ்ந்து வந்­தது.

மாமி­சம் சாப்­பி­டும் விலங்­கி­னம் என்­ற­போ­தும் பாபியா சைவ உணவு மட்­டுமே சாப்­பிட்­ட­தால் அதை தெய்­வீக முதலை என்று பல­ரும் கரு­தி­னர். இந்த முத­லையைக் காண்­பதற்­கா­கவே பக்­தர்­கள் பலர் அந்தக் கோவி­லுக்­குத் திர­ளாக வந்­த­னர். இது­வரை பாபியா முதலை யாரை­யும் தாக்­கி­ய­தில்லை என்று கூறப்­பட்­டது. அண்­மைய சில நாள்­களாக உடல்­நிலை பாதிக்­கப்­பட்ட நிலை­யில், 75 வய­தான அம்­மு­தலை மாண்­டு­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இரவு நேரத்­தில் கோவில் மூடப்­பட்டபின், குளத்­தி­லி­ருந்து கோவி­லுக்கு வந்து பாபியா ஓய்­வெ­டுக்­கும் என்­றும் விடிந்­த­தும் அது மீண்­டும் குளத்­துக்­குச் சென்று­விடும் என்றும் கூறப்­பட்­டது.