ராகுல் காந்தி வருத்தம்: ஒற்றுமை நடைப் பயணத்தில் கண்ணீர் சிந்திய இளம்பெண்

2 mins read
9f6bfe59-c479-4e56-b151-ca4a43d76ef6
ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தின்போது இளம்பெண் ஒருவரும் அவரது சகோதரரும் ராகுல் காந்தியைச் சந்தித்து, நாட்டில் நிலவும் கருத்து மோதல்களால் தங்களின் நண்பர்களை இழந்து வருவதாகக் கூறினர். அப்போது அந்த இளைஞரின் சகோதரி கண்ணீர்விட்டு அழுதார். படம்: ஊடகம் -

பெங்­க­ளூரு: இந்­திய ஒற்­றுமை நடைப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள காங்­கி­ரஸ் எம்.பி. ராகுல் காந்தி தற்­போது கர்­நா­ட­கா­வில் நடைப் பய­ணத்­தைத் தொடர்­கி­றார்.

அந்­தப் பய­ணத்­தில் அவ­ரைச் சந்­தித்த இளம்­பெண் ஒரு­வர் கண்­ணீர் சிந்தி புலம்­பும் காட்சி வெளி­யான நிலை­யில், அது குறித்து ராகுல் காந்தி தனது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் விவ­ரித்­துள்­ளார்.

இது தொடர்­பாக ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில், "இந்த இளம்­பெண் என்­னி­டம் அழுது புலம்­பி­னார். அதற்­கான கார­ணத்தை நான் உங்­க­ளுக்கு விவ­ரிக்­கி­றேன்.

"நமது நாட்­டின் அடிப்­படை மதிப்­பீ­டு­கள் மீது இந்த இளம்­பெண்­ணும், அவ­ரது சகோ­த­ர­ரும் பெரும் மதிப்பு கொண்­டுள்­ள­னர்.

"ஆனால், இன்­றைக்கு இவர்­கள் இரு­வ­ரும் நாட்­டில் உள்ள லட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­க­ளைப் போல் நாட்­டின் கனவு தங்­க­ளின் கண்­முன்­னா­லேயே சிதை­வ­தைக் கண்டு பெருந்­து­ய­ரத்­தில் வாடு­கின்­ற­னர்.

"அவர்­கள் அனை­வ­ரும் சுதந்­தி­ரம், சமத்­து­வம் ஆகிய கோட்­பா­டு­க­ளைக் கேட்டே வளர்ந்­துள்­ள­னர்.

"அன்பு, நல்­லி­ணக்­கம், சகோ­த­ரத்­து­வம் ஆகி­யவை புகட்­டப்­பட்டு வளர்ந்­துள்­ள­னர். ஆனால், இன்று கருத்து மோதல்­க­ளால் தங்­க­ளின் நண்­பர்­களை இழந்­து­வ­ரு­வ­தா­க­வும், எதிர்­கா­லம் மீதான நம்­பிக்கை அழிந்து வரு­வ­தா­க­வும் வருத்­தம் தெரி­விக்­கின்­ற­னர். அது­போல் நம் நாட்­டில் அவர்­க­ளுக்­கான வாய்ப்­பு­கள் குறைந்து வரு­வதை நினைத்­தும் வருந்­து­கின்­ற­னர்.

"இந்­தியா வெறுப்­பால், வன்­முறை­யால், வேலை­வாய்ப்­பின்­மை­யால், எல்­லா­வற்­றிற்­கும் மேலாக ஒரு தொலை­நோக்­குப் பார்வை இல்­லா­மல் இருப்­ப­தைக் கண்டு மக்கள் வருந்­து­கின்­ற­னர்," என்று ராகுல் காந்தி தனது சமூக ஊடகத்தில் பதி­விட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், கர்­நா­ட­கத்­தில் இன்­னொரு சம்­ப­வத்­தில், ராகுல் காந்தி, மாநில காங்­கி­ரஸ் தலை­வர் டி.கே.சிவக்­கு­மார், பொதுச்­செ­ய­லா­ளர் வேணு­கோ­பால் ஆகி­யோர் சிறு­வன் ஒரு­வ­னு­டன் புஷ்-அப் போட்­டி­யில் கலந்­து­கொண்­ட­னர். அந்­தக் காணொ­ளி­யும் சமூக ஊட­கங்­களில் பரவி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பாஜக ஆளும் கர்­நா­டக மாநி­லத்­தில் நடை­பெற்று வரும் காங்­கி­ர­சின் ஒற்­றுமை நடைப்­ப­ய­ணத்­தில் தன்­னு­டன் வரு­ப­வர்­க­ளை­யும் அப்­போது தன்­னைச் சந்­திக்க வரு­ப­வர்­க­ளை­யும் கல­க­லப்­பாக்க ராகுல் காந்தி மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள் அனை­வ­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்து வரு­கிறது.