பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கொப்பல் மாவட்டத்தில் விடாது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகளை அடித்துச் சென்றுவிட்டது. தாம்பூர் அருகே கட்டப்பட்டு வரும் ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமானத்தையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சாலைகளில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதால் கனரக வாகனங்கள் சாலைகளில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
கலாபுர்கி, யாத்புரி, கொப்பல், குடகு, வல்லாரி, சித்ரதுர்கா, சிக்கமங்களூரு, சிக்கபள்ளாபூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. 17 மாவட்டங்களில் 900 கிராமங்களில் வாழும் ஏறக்குறைய 8.43 லட்சம் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

