ஐந்து ஆண்டுகளில் 13 பெண்கள் மாயம்; நரபலி கொடுக்கப்பட்டனரா என சந்தேகம்

ஐந்து ஆண்டுகளில் 13 பெண்கள் மாயம்; நரபலி கொடுக்கப்பட்டனரா என சந்தேகம்

2 mins read
f798ea8f-9438-4cd1-9dec-bf1fad5bb0cf
கொலையுண்ட பெண்கள் புதைக்கப்பட்ட இடம். படம்: ஊடகம் -

திரு­வ­னந்­த­புரம்: கேர­ளா­வில் இரண்டு பெண்­கள் நர­பலி கொடுக்­கப்­பட்­ட­தாக வெளி­யான தக­வல் குறித்து விசா­ரணை நடத்த அம்­மா­நில அரசு சிறப்­புக் குழு ஒன்றை அமைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், கடந்த ஐந்து ஆண்­டு­களில் மாய­மான 12 பெண்­கள் நர­பலி கொடுக்­கப்­பட்டி­ருக்­க­லாம் என்ற சந்­தே­க­மும் எழுந்­துள்­ளது.

கேரள மாநி­லம் பத்­த­னம் திட்டா மாவட்­டத்­தில் உள்ள இலந்­தூ­ரைச் சேர்ந்­த­வர் பக­வல் சிங். அப்­ப­குதி மக்­க­ளுக்கு அவர் பாரம்­ப­ரிய மருத்து­வ­ராக அறி­மு­க­மா­கி­யி­ருந்­தார். மனைவி லைலா­வு­டன் வசித்து வந்த பக­வல் சிங்­குக்கு இணை­யம் வழி அறி­மு­க­மா­னார் ஷஃபி. ஓர­ளவு பழ­கிய பின்­னர், தமக்கு மந்­தி­ரங்­கள் தெரி­யும் என்­றும் இளம் பெண்­களை நர­பலி கொடுத்­தால் பெரும் செல்­வத்தை அடைய முடி­யும் என்­றும் பக­வல் சிங்­கி­டம் கூறி­யுள்­ளார் ஷஃபி.

நர­ப­லிக்கு தேவைப்­படும் பெண்­க­ளைத் தாமே அழைத்து வரு­வ­தாக ஷஃபி கூறி­யதை பக­வல் சிங் ஏற்றுக்­கொண்­டார்.

இந்­நி­லை­யில், கேர­ளா­வைச் சேர்ந்த 59 வயது ரோஸ்­லின், தமிழ­கத்­தின் தர்­ம­புரி மாவட்­டத்­தைச் சேர்ந்த பத்மா ஆகிய இரு­வ­ரும் திடீ­ரென அடுத்­த­டுத்து மாய­மா­கி­னர்.

இரு­வ­ரும் காணா­மல் போனது ஒரே மாதி­ரி­யாக இருந்­த­தால் இரு மாநில காவல்­து­றை­யி­ன­ரும் தீவிர விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

பத்­மா­வின் கைபேசி கடை­சி­யாக இயங்­கிய இடத்தை வைத்து தேடு­தல் வேட்டை நடத்­தி­ய­போது ஷஃபியுடன் அவர் நடந்து செல்­லும் காட்­சி­கள் அடங்­கிய கண்­கா­ணிப்பு கேமரா காணொ­ளிப் பதி­வு­கள் கிடைத்­தன.

இதை­ய­டுத்து அவர் கைதா­னார். பின்­னர் நடந்த விசா­ர­ணை­யில் மாய­மான இரு பெண்­க­ளை­யும் பக­வல் சிங் வீட்­டுக்கு அழைத்­துச் சென்று நர­பலி கொடுத்­த­தா­க­வும் பிறகு இரு­வ­ரது உடல்­க­ளை­யும் துண்டு துண்­டாக வெட்டி வீட்­டி­லேயே புதைத்­த­தா­க­வும் ஷஃபி தமது வாக்­கு­மூ­லத்­தில் தெரி­வித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து, பக­வல் சிங் தம்­ப­தி­ய­ரும் ஹிகாப்­பும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இதற்­கி­டையே, கேர­ளா­வில் கடந்த ஐந்து ஆண்­டு­களில் மட்­டும், கொச்சி நகர காவல் எல்­லைக்கு உட்­பட்ட பகு­தி­களில் 13 பெண்­கள் காணா­மல் போயுள்­ள­னர்.

அவர்­களில் ஒரு பெண்­ணின் உடல் மட்­டுமே மீட்­கப்­பட்­டுள்ள நிலை­யில், மற்ற 12 பெண்­க­ளின் கதி என்­ன­வா­னது என்­பது இன்­னும் தெரி­ய­வில்லை.

அவர்­களும் நர­பலி கொடுக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் எனும் சந்­தே­கம் எழுந்­துள்­ளது.