'மாநிலங்கள் மீது மொழி, கலாசார தாக்குதல்கள் கூடாது'

'மாநிலங்கள் மீது மொழி, கலாசார தாக்குதல்கள் கூடாது'

1 mins read
35743b40-39e0-4361-be5c-e12a2b79a5c3
-

திரு­வ­னந்­த­புரம்: மொழி, கலாசா­ரம் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டால் அதற்­குக் கார­ண­மா­ன­வர்­கள் காங்­கி­ரஸ் கட்­சி­யின் முழு பலத்­தை­யும் பார்க்க வேண்­டி­யது இருக்­கும் என ராகுல் காந்தி (படம்) எச்­ச­ரித்­துள்­ளார்.

இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் எவ்­வாறு வாழ வேண்­டும், அவர்­க­ளின் குழந்­தை­கள் எந்த மொழி­யில் தேர்­வு­களை எழுத வேண்­டும் என்­பதை எல்­லாம் வேறு யாரும் தீர்­மா­னிக்க முடி­யாது என்று கர்­நா­ட­கா­வில் மேற்­கொண்­டுள்ள நடைப்­ப­ய­ணத்­தின்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"கர்­நா­டகா மக்­கள் கன்­ன­டம் பேச விரும்­பி­னால், தமிழ்­நாட்டு மக்­கள் தமிழ் பேச விரும்­பி­னால், கேரள மக்­கள் மலை­யா­ளம் பேச விரும்­பி­னால் அவர்­க­ளுக்கு அதற்­கான உரிமை உண்டு, அதனை அனு­ம­திக்­க­வும் வேண்­டும்.

"மொழி என்­பது பேசு­வ­தற்கு மட்­டும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. மொழி என்­பது வர­லாறு, கலாசாரம். அது நமது சிந்­தனை வளம். மக்கள் அவர்­க­ளின் மொழி­யில் பேசு­வதை யாரா­லும் தடுக்க முடி­யாது," என்­றார் ராகுல் காந்தி.

மத்­திய பணி­யா­ளர்­கள் தேர்­வா­ணை­யம் இந்தி, ஆங்­கி­லத்­தில் மட்­டுமே தேர்­வு­களை நடத்­து­கிறது என்­றும் மாநில மொழி­களில் தேர்­வெ­ழுத அனு­ம­திப்­ப­தில்லை என்­றும் பர­வ­லா­கப் புகார் எழுந்­துள்­ளது. இது­கு­றித்து கருத்து தெரி­வித்­த­போதே ராகுல் மேற்­கு­றிப்­பிட்ட எச்­ச­ரிக்­கையை விடுத்­தார். பல்வேறு மாநிலக் கட்சிகள் இத்தேர்வுகளை மாநில மொழியில் நடத்த வேண்டு மென வலியுறுத்தி உள்ளன.