பண மோசடி: செய்தியாளர் மீது வழக்குப் பதிவு

பண மோசடி: செய்தியாளர் மீது வழக்குப் பதிவு

1 mins read
ef129c52-6b98-4a97-acce-7b52c60b1d12
-

லக்னோ: பல்­வேறு முன்­னணி ஊட­கங்­களில் பணி­யாற்­றிய பெண் செய்­தி­யா­ளர் ராணா அயூப் மீது பண மோசடி குற்­றச்­சாட்டின் கீழ் வழக்குப் பதிவானது.

அறக்­கட்­டளை என்ற பெய­ரில் பொது­மக்­க­ளி­டம் பணம் வசூ­லித்து மோசடி செய்­த­தாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்­ளது.

மொத்­தம் ரூ.1.77 கோடி மோசடி செய்­த­தாக குற்­றச்­சாட்டை எதிர்­கொண்­டுள்ள நிலை­யில் அவ­ரது வங்­கிக்­கணக்கையும் முடக்கி உள்ளனர். அறக்­கட்­டளை மூலம் நிவா­ர­ணப் பணி­களை மேற்­கொள்­வ­தா­கக் குறிப்­பிட்டு அவர் நிதி திரட்­டி­யுள்­ளார். அதி­லி­ருந்து ரூ.74.50 லட்­சத்தை பிர­த­மர் நிவா­ரண நிதிக்­காக அனுப்­பிய பின்­னர், ஐம்­பது லட்­சம் ரூபாயை தமது சொந்த வங்­கிக் கணக்­கில் நிரந்­தர வைப்­புத் தொகை­யாக செலுத்­தி­யது தெரிய வந்­துள்­ளது.

மூன்று வெவ்­வேறு வங்­கிக் கணக்­கு­களில் அவர் அறக்­கட் டளைக்­கு­ரிய தொகையைச் சேமித்து வைத்­துள்­ள­தாக புகார் அளிக்­கப்­பட்­டதையடுத்து, காவல் ­துறை விசா­ரணை மேற்­கொண்­டது.

இந்­நி­லை­யில், மத்­திய அம­லாக்­கத்­துறை விசா­ரணை நடத்­தி­ய­தன் அடிப்­ப­டை­யில், ராணா அயூப்­பின் வங்­கிக்­க­ணக்கு முடக்­கப்­பட்­டது. மும்­பை­யைச் சேர்ந்த இவர், 'தி வாஷிங்­டன் போஸ்ட்' பத்­தி­ரி­கை­யில் கட்­டு­ரை­கள் எழுதி­ உள்­ளார்.

'தெகல்ஹா' புல­னாய்வு இத­ழி­லும் பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ள­வர். தகவல் தொழில்நுட்பச் சட்டம், கறுப்பு பணம் சட்டம் ஆகியவற்றின் கீழ் ராணா ஆயுப் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.