'இந்தியா அதிவேக வளர்ச்சி'

'இந்தியா அதிவேக வளர்ச்சி'

1 mins read
982ebf1c-88a1-4a4c-b651-27487e1c03e2
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அனைத்துலக நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத்தும் சந்தித்தனர். படம்: இந்திய ஊடகம் -

மும்பை: இந்­தியா, பொரு­ளி­ய­லில் அதி­வேக வளர்ச்சி காணும் நாடாக இருக்­கும் என்று அந்­நாட்­டின் மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் உறுதி கூறி­யுள்­ளார்.

ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு கூட்­டம் கடந்த மாதம் 30ஆம் தேதி நடந்­தது. அதில், கட­னுக்­கான வட்­டியை 0.5 விழுக்­காடு உயர்த்த முடிவு செய்­யப்­பட்­டது.

ஆனால் அந்த கூட்­டத்­தில் ரிசர்வ் வங்கி ஆளு­நர் சக்­தி­காந்த தாஸ் ஆற்­றிய உரை வெள்­ளிக் கிழமை வெளி­யி­டப்­பட்­டது. அதில், கல­வை­யான அறி­கு­றி­கள் தென் பட்­டா­லும் நாட்­டின் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் தொடர்ந்து வேகம் எடுத்­துள்­ளன. உல­க­ளா­விய அர­சி­யல் நில­வ­ரங்­கள், சவால்­களை உண்­டாக்கி வரு­கின்­றன. அதையும் மீறி நடப்பு நிதி ஆண்­டில் பொரு ளிய­லில் வேக­மாக வள­ரும் நாடு களில் ஒன்­றாக இந்­தியா இருக்­கும் என்று திரு சக்­தி­காந்த தாஸ் தெரிவித்திருந்தார்.

இதற்­கி­டையே அனைத்­து­லக நாணய நிதி­யம்-உலக வங்கி ஆண்­டுக் கூட்­டத்­தை­யொட்டி வாஷிங்­டன் சென்­றுள்ள இந்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன், அங்கு அனைத்­து­லக நாணய நிதி­யத்­தின் துணை நிர்­வாக இயக்­கு­நர் கீதா கோபி­நாத்­தைச் சந்­தித்­துள்­ளார். அப்போது உலக நடப்பு, அடுத்த ஜி-20க்கு இந்தியா தலைமையேற்கும் விவகாரம் குறித்து இருவரும் பேசினர்.