பெங்களூரு நகரில் முதல்முறையாக தரையிறங்கிய ஆகப்பெரிய விமானம் எமிரேட்ஸ் 'ஏ380'

பெங்களூரு நகரில் முதல்முறையாக தரையிறங்கிய ஆகப்பெரிய விமானம் எமிரேட்ஸ் 'ஏ380'

2 mins read
86211494-3b15-48fc-a81f-836a9e30b5f2
பெங்களூரு நகரில் முதல்முறையாக தரையிறங்கிய உலகின் ஆகப் பெரிய விமானமான எமிரேட்ஸ் ஏ380. படம்: இந்திய ஊடகம் -

பெங்களூரு: பெங்­க­ளூரு நக­ரில் வர­லாற்­றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்­வாக உல­கின் ஆகப்­பெ­ரிய பயணி­கள் விமா­னம் வெள்­ளிக்­கி­ழமை பிற்­ப­கலில் தரை­யி­றங்­கி­யது.

தென்இந்­தியா நகர் ஒன்­றில் ஆகப்­பெ­ரிய விமா­னம் தரை இறங்­கு­வது இதுவே முதல்முறை. இது, எமி­ரேட்ஸ் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­தின் 'ஏ380' ரக விமா­ன­மா­கும். விமா­னத்தை கேப்­டன் நிகில் தியா­க­ரா­ஜனும் பெங்­க­ளூர் நக­ரைச் சேர்ந்த சண்­டீப் பிர­பு­வும் ஓட்டி வந்­த­னர். இது, இரண்டு அடுக்கு வச­தியை கொண்­டது. 500க்கும் மேற்­பட்ட இருக்­கை­கள் உள்­ளன.

எமி­ரேட்ஸ் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னம் பெங்­க­ளூ­ரு­வுக்கு வரு­கிற 30ஆம் தேதி­யி­லி­ருந்து அந்த விமானப் போக்­கு­வ­ரத்தை தொடங்க உள்­ளது. அதற்கு முன்­ன­தா­கவே, அந்த விமா­னத்­தின் சேவை அக்­டோ­பர் 14ஆம் தேதி இயக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டது. அதன்­படி அந்த மிகப்­பெ­ரிய விமா­னம் துபாய்-பெங்­க­ளூரு இடையே போக்குவ­ரத்தை தொடங்­கி­யுள்­ளது.

அந்த விமா­னம் முதல்முறை­யாக நேற்று துபா­யில் இருந்து காலை 10 மணிக்கு புறப்­பட்டு மாலை 3.40 மணிக்கு பெங்­க­ளூரு அனைத்­து­லக விமான நிலை­யம் வந்து சேர்ந்­தது.

அந்த விமா­னத்தை கர்­நா­டக மாநில கூட்­டு­றவு அமைச்­சர் எஸ்.டி.சோம­சே­கர், இந்­தி­யா­வுக்­கான ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­க­ளின் தூதர் அக­மது அப்­துல் ரகு­மான் அல்­பென்னா, பெங்­க­ளூரு கெம்­பே­ ­கவுடா அனைத்­து­லக விமான நிலைய நிர்­வாக இயக்­கு­நர் ஹரி மரார் மற்­றும் உயர் அதி­கா­ரி­கள் உற்­சா­கத்­து­டன் வர­வேற்­ற­னர்.

அந்த விமா­னத்­தில் 224 பய­ணி­கள் பய­ணம் செய்து பெங்­க­ளூரு வந்­த­னர்.

இந்­தி­யா­வில் டெல்லி, மும்பை, ஐத­ரா­பாத் மற்­றும் பெங்­க­ளூரு ஆகிய 4 விமான நிலை­யங்­களில் மட்­டுமே ஏர்­பஸ் ஏ380 ரக விமா­னங்­கள் தரையிறங்கும் வசதி உள்ளது.