வெளிநாடுகளில் 'ஐஐடி': மத்திய அரசு திட்டம்

வெளிநாடுகளில் 'ஐஐடி': மத்திய அரசு திட்டம்

1 mins read
61ba08bc-fda5-4710-9f7f-7ec311d752c0
-

புது­டெல்லி: எதிர்­வ­ரும் 2047ஆம் ஆண்டு வளர்ந்த நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இடம்­பெற வேண்­டும் என்­பதை கருத்­தில் கொண்டு அதற்­காக இப்­போது முதலே, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுச் செயல்­பட்டு வரு­வ­தாக மத்­திய அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் தெரி­வித்­துள்­ளார்.

நாட்­டின் மிக உயர்ந்த கல்வி நிலை­யங்­களில் ஒன்­றான 'ஐஐடி' நிலை­யங்­களை வெளி­நா­டு­க­ளி­லும் தொடங்க மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தாக அவர் மங்­க­ளூ­ரு­வில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பேசி­ய­போது குறிப்­பிட்­டார்.

"அடுத்த பத்து ஆண்­டு­களில் இந்­தியா எரி­சக்தி துறை­யில் முழுமை பெற்­று­வி­டும். அதன் பின்­னர் அனைத்து வச­தி­க­ளு­டன் மேம்­ப­டுத்­தப்­பட்ட துறை­யாக எரி­சக்தி துறை செயல்­படும்.

"எதிர்­கா­லத்­தில் செயற்கை நுண்­ண­றிவு, இயந்­திர கல்வி, தக­வல்-தரவு பகுப்­பாய்வு, முப்­ப­ரி­மாண அச்­சி­டும் பணி, மர­பணு திருத்­தம் ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்த முடிவு செய்­யப்­பட்டு இருக்­கிறது," என்­றார் அமைச்­சர் தர்மேந்­திர பிர­தான்.

அனைத்­து­லக அள­வி­லான சவால்­களை எதிர்­கொள்­ளும் அள­விற்கு இந்­தி­யத் தொழில்­நுட்ப கல்வி நிறு­வ­னத்­தின் தரம் உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், உல­க­ள­வில் பாராட்­டு­கள் குவிந்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தார். "அடுத்த இரண்டு ஆண்­டு­களில் வெளி­நா­டு­க­ளி­லும் ஐஐ­டிக்­களை தொடங்க திட்­ட­மிட்­டுள்­ளோம். இதற்­கான நட­வ­டிக்­கை­களில் கூடு­தல் கவ­னம் செலுத்­தப்­படும்," என்று அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் மேலும் கூறி­னார்.