துணை முதல்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

துணை முதல்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

2 mins read
5bbb8c29-c734-4422-872f-a57cf1bc4141
-

மணீஷ் சிசோடியா கைதாக வாய்ப்புள்ளதாகத் தகவல்

புது­டெல்லி: டெல்லி அர­சின் மது­பா­னக் கொள்­கையை செயல்­ப­டுத்­து­வது தொடர்­பில் பல்­வேறு முறை­கே­டு­கள் நடந்­தி­ருப்­ப­தாக எழுந்­துள்ள புகாரை அடுத்து, அம்­மா­நில துணை முதல்­வர் மணிஷ் சிசோ­டியாவிடம் சிபிஐ அதி­கா­ரி­கள் நேற்று மீண்டும் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

முதல்­வர் கெஜ்­ரி­வால் தலைமை­யி­லான டெல்லி அரசு புதிய மது­பா­னக் கொள்­கையை அறி­வித்­த­தற்கு பலத்த எதிர்ப்பு கிளம்­பி­யது.

இது தொடர்­பாக துணை முதல்­வர் மணிஷ் சிசோ­டியா உள்­ளிட்ட ஆம் ஆத்மி கட்­சி­யி­னர் மது­பான ஆலை உரி­மை­யா­ளர்­க­ளி­டம் இருந்து லஞ்­சம் பெற்­ற­தாக புகார் எழுந்­தது.

இதை­ய­டுத்து, மணிஷ் சிசோ­டியா உள்­ளிட்­டோ­ரின் வீடு­களில் சிபிஐ அதி­கா­ரி­கள் ஏற்­கெ­னவே சோதனை நடத்தி இருந்­த­னர்.

அதன் எதி­ரொ­லி­யாக, துணை முதல்­வர் மணிஷ் சிசோ­டியா கைது செய்­யப்­ப­டு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­ட்டது.

இந்­நி­லை­யில், அடுத்­த­கட்ட விசா­ர­ணை­க்கு முன்­னி­லை­யா­கு­மாறு, அவ­ருக்கு சிபிஐ அழைப்­பாணை அனுப்பி இருந்­தது. அதன் பேரில் அவர் நேற்று சிபிஐ அலு­வ­ல­கத்­தில் முன்­னி­லை­யா­னார்.

அதற்கு முன்­ன­தாக, டுவிட்­ட­ரில் பதி­விட்ட அவர், மது­பானக் கொள்கை முறை­கேடு தொடர்­பாக தமது வீட்­டில் சிபிஐ அதி­கா­ரி­கள் 14 மணி நேரம் சோதனை நடத்தி­ய­தா­க­வும் அப்­போது எது­வும் கைப்­பற்­றப்­ப­ட­வில்லை என்­றும் குறிப்பிட்டிருந்தார்.

"எனது வங்கி பாது­காப்­புப் பெட்­ட­கத்­தி­லும் எது­வும் கிடைக்­க­வில்லை. எனது கிரா­மத்­தில் இருந்து அவர்­கள் எதை­யும் கைப்­பற்ற முடிய­வில்லை. தற்­போது என்னை சிபிஐ தலைமை அலு­வ­ல­கத்­துக்கு விசா­ர­ணைக்கு அழைத்­துள்­ள­னர். அதற்கு முழு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வேன். வாய்­மையே வெல்­லும்," என்று மணிஷ் சிசோ­டியா மேலும் தெரி­வித்திருந்தார்.

நேற்று காலை சிபிஐ அலு­வ­ல­கத்­தில் தொடங்­கிய விசா­ரணை, பல மணி நேரம் நீடித்­தது. அதன் முடிவில் துணை முதல்­வர் மணிஷ் சிசோ­டியா கைது செய்­யப்­பட வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.

மிக விரைவில் மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியைவிட, ஆம் ஆத்மி கட்சிதான் பாஜகவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சிக்கு உள்ள நற்பெயரைச் சிதைக்க வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே சிபிஐ மூலம் அக்கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடுத்துள்ளதாகவும் ஆம் ஆத்மி தலைமை சாடியுள்ளது.