செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
cfee62dd-ad80-4698-b315-72b2434d0c99
-

கேரளாவில் பத்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை நீடித்து வருவதை அடுத்து பத்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், காசர்கோடு, இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு காற்று வழக்கத்தைவிட பலமாக வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

'பட்டினிக் குறியீடு பட்டியல் இந்தியாவின் நன்மதிப்பைக் குலைக்கும் முயற்சி'

புதுடெல்லி: அனைத்துலக பட்டினிக் குறியீட்டு பட்டியலில் இந்தியா 107 இடத்துக்கு தள்ளப்பட்டு இருப்பது உலக அரங்கில் இந்தியாவுக்கு உள்ள நன்மதிப்பை சீர்குலைக்கும் முயற்சி என மத்திய அரசு சாடி உள்ளது. அண்மையில் 121 நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தப் பட்டியல் வெளியானது. அதன்படி கடந்த ஆண்டு 101ஆவது இடத்தில் இருந்த நிலையில் இந்தியா தற்போது ஆறு இடங்கள் சரிவுகண்டு 107ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில், மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சுவெளியிட்டுள்ள அறிக்கையில், போலி தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சாடியுள்ளது. "உலக அளவில் மிகப்பெரிய உணவு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு முயன்று வருகிறது. ஆனால் இத்தகைய முயற்சிகளை வேண்டும் என்றே புறக்கணித்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய நாட்டில் வெறும் மூவாயிரம் பேரிடம் மட்டும் கருத்து கேட்கப்பட்டுள்ளது," என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

மகளிர் கல்லூரியின் சுவர் ஏறிக் குதித்த மாணவர்கள்: காவல்துறை விசாரணை

புது­டெல்லி: மக­ளிர் கல்­லூ­ரிக்­குள் அத்­து­மீறி நுழைந்த கல்­லூரி மாண­வர்­கள் மீது டெல்லி காவல்­துறை வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரித்து வரு­கிறது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை டெல்­லி­யில் உள்ள மிரண்டா ஹவுஸ் பெண்­கள் கல்­லூ­ரி­யில் தீபா­வ­ளி­யை­யொட்டி கலை நிகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன. ஆடல், பாடல் என்று நிகழ்ச்சி களை­கட்­டிய நிலை­யில், கூட்­டம் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யது. இத­னால் கல்­லூரி நுழைவு வாயிலை மூட கல்­லூரி நிர்­வா­கம் உத்­த­ர­விட்­டது. இந்­நி­லை­யில், அரு­கில் உள்ள ராம்­ஜாஸ் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த மாண­வர்­கள் சிலர் திடீ­ரென பெண்­கள் கல்­லூ­ரிக்­குள் நுழைந்­த­னர். நுழைவு வாயில் மூடப்­பட்­டி­ருந்­த­போ­தும், கல்­லூரி சுவர் மீதேறி குதித்து அம்­மா­ண­வர்­கள் உள்ளே நுழைந்­துள்­ள­னர். இதை­ய­டுத்து ஆபாச முழக்­கங்­களை எழுப்­பி­ய­து­டன் சில மாண­வி­க­ளுக்கு அம்­மா­ண­வர்­கள் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தா­க­வும் கூறப்­படு­கிறது. மாண­வர்­கள் சுவர் ஏறிக்­கு­திக்­கும் காணொ­ளிப் பதிவு இணை­யத்­தில் வெளி­யாகி, பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது. இச்சம்பவம் குறித்து விசா­ரணை நட­த்­தும்­படி டெல்லி மக­ளிர் ஆணை­யம் காவல்­து­றைக்கு நோட்­டீஸ் அனுப்­பி­யுள்­ளது.