அமைச்சர் ரோஜா மீது கொலை முயற்சி தாக்குதல்: விமான நிலையத்தில் பதற்றம்

அமைச்சர் ரோஜா மீது கொலை முயற்சி தாக்குதல்: விமான நிலையத்தில் பதற்றம்

1 mins read
42a28229-8364-4724-bf79-8411e48c497c
ரோஜாவின் காரும் உடன் வந்த வாகனங்களும் ஜனசேனா கட்சியினரால் தாக்கப்பட்டன. படம்: தகவல் ஊடகம் -

அம­ரா­வதி: தெலுங்கு நடி­கர் பவன் கல்­யாண் தலை­மை­யி­லான ஜன­சேனா கட்­சி­யி­னர் நடத்­திய தாக்கு­த­லில் முன்னாள் நடிகையும் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா உயிர் தப்­பி­னார். இந்­தத் தாக்­கு­தல் கார­ண­மாக விசா­கப்­பட்­டி­னம் விமான நிலை­யத்­தில் பதற்­றம் நில­வி­யது.

ஆந்­திர மாநி­லத்­துக்கு மூன்று புதிய தலை­ந­க­ரங்­களை அறி­வித்­துள்­ளது முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி தலை­மை­யி­லான அரசு. இதற்கு ஜன­சேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் அர­சின் முடி­வுக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் வகை­யில் நடை­பெற்ற பேரணி ஒன்­றில் ரோஜா பங்­கேற்­றார். அதன் பின்­னர் அவர் விசா­கப்­பட்­டி­னம் விமான நிலை­யத்­துக்கு வந்­தார். இந்நிலையில், கட்சி நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ப­தற்­காக நடி­கர் பவன் கல்­யா­ணும் விசா­கப்­பட்­டி­னம் வர இருப்­ப­தாக வெளி­யான தக­வலை அடுத்து அவ­ரது கட்­சி­யி­ன­ரும் விமான நிலை­யத்­தில் திர­ளா­கத் திரண்­டி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில் அமைச்சர் ரோஜா­வின் கார் மீது திடீர் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. ஜன­சேனா தொண்­டர்­கள் அர­சுக்கு எதி­ராக முழக்­கங்­களை எழுப்­பி­ய­படி தங்­கள் கைவ­சம் இருந்த பதா­கை­கள், கொடிக் கம்­பு­கள் ஆகி­ய­வற்றை ரோஜா­வின் கார் மீதும் அதைப் பின்­பற்றி வந்த ஆத­ர­வா­ளர்­க­ளின் வாக­னங்­கள் மீதும் வீசி எறிந்­த­னர்.

இதில், ரோஜா­வின் உத­வி­யாளர் படுகாயமடைந்தார்.

மேலும், பாது­காப்புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த காவல்­து­றை­யி­ன­ரும் காயம் அடைந்­த­னர். இத்­தாக்­கு­தல் தொடர்­பாக ஜன­சேனா கட்­சியை சேர்ந்த 25 பேர் கைதாகி உள்­ள­னர். அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ரோஜா, தன் மீது கொலை முயற்சி தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தாகத் தெரி­வித்­தார்.