எல்லையைப் பாதுகாக்க 80 நவீன வானூர்திகளை நிறுத்த திட்டம்

எல்லையைப் பாதுகாக்க 80 நவீன வானூர்திகளை நிறுத்த திட்டம்

2 mins read
cc254b97-d8f5-4d32-b6cc-d6e207c9db6d
-

புது­டெல்லி: அண்டை நாடு­க­ளின் ராணு­வம், பயங்­க­ர­வா­தி­க­ளின் ஊடு­ரு­வ­லைத் தடுக்­கும் வித­மாக இந்­திய எல்­லை­யில் ஆளில்லா சிறிய ரக வானூர்­தி­களை நிறுத்தி வைக்க மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.

இந்த நட­வ­டிக்­கைக்காக உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட 80 வானூர்­தி­களை வாங்­கு­கிறது இந்­திய ராணு­வம். எல்­லைப் பாது­காப்பை முன்­வைத்து ஏற்­கெ­னவே இஸ்­‌ரே­லி­டம் இருந்து அதி­ந­வீன ஹெரோன் வகை வானூர்­தி­களை இந்­திய ராணு­வம் வாங்­கி­யுள்­ளது. அவை தற்­போது லடாக் எல்­லைப் பகு­தி­யில் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், பாது­காப்­பைப் பலப்­ப­டுத்­தும் வித­மாக உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட வானூர்­தி­களை வாங்க ராணு­வம் திட்­ட­மிட்­டுள்­ளது.

இந்த நவீன வானூர்தி மூலம் சுமார் 15 கிலோ வெடி­பொ­ருள்­க­ளைக் கொண்டு செல்ல முடி­யும். கடந்த 2020ஆம் ஆண்டு இந்­திய, சீன ராணுவ வீரர்­கள் இடையே லடாக் எல்­லைப் பகு­தி­யில் மோதல் வெடித்­தது.

அதன் பின்­னர், இரு­த­ரப்­பும் எல்­லை­யில் இருந்து துருப்­பு­களை திரும்­பப் பெற்­ற­தாக அறி­வித்­தா­லும் லடாக்­கில் பதற்­ற­நிலை நீடித்து வரு­கிறது. அங்கு புதிய ராணுவ முகாம்­களை அமைக்க முடி­யாது என்­ப­தா­லும் அதிக அள­வில் வீரர்­க­ளைக் குவித்து வைக்க இய­லாது என்­ப­தா­லும் ஆளில்லா வானூர்­தி­க­ளின் தேவை அதி­க­ரித்­துள்­ளது.

குறிப்­பாக, கிழக்கு லடாக்­கில் கல்­வான் பள்­ளத்­தாக்கு பகு­தி­யைப் பாது­காக்க இந்த வானூர்­தி­கள் உத­வும் என ராணு­வத் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வுக்­குள் ஊடு­ரு­விய பாகிஸ்­தா­னின் சிறிய ரக ஆளில்லா உளவு வானூர்­தியை இந்­திய எல்லை பாது­காப்­புப் படை­யி­னர் சுட்டு வீழ்த்­தி­னர்.

பஞ்­சாப் மாநி­லம் அமிர்­த­ச­ரஸ் எல்­லைப் பகு­தி­யில் அந்த வானூர்தி ஊடு­ருவ முற்­பட்­டது. இதை­ய­டுத்து அது சுட்டு வீழ்த்­தப்­பட்­டது. பின்­னர் அதைக் கைப்­பற்றி சோத­னை­யிட்­ட­போது, கறுப்பு துணிப்­பை­யில் மர்­மப்­பொ­ருள்­கள் இருப்­பதை ராணுவ அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

கடந்த ஐந்து நாள்­களில் பஞ்­சாப் எல்­லை­யில் இரண்டு வானூர்­தி­கள் இவ்­வாறு சுட்டு வீழ்த்­தப்­பட்­டன.

இந்­நி­லை­யில், இந்­திய ராணு­வத்­தின் முப்­ப­டை­க­ளின் பயன்­பாட்­டுக்­காக சிறிய ரக மின்­காந்த பீரங்­கி­கள் நேற்று முன்­தி­னம் வெற்­றி­க­ர­மாக சோதிக்­கப்­பட்­டன.