ஹெலிகாப்டர் விபத்தில் கேதார்நாத் சென்ற பக்தர்கள் 7 பேர் பலி

ஹெலிகாப்டர் விபத்தில் கேதார்நாத் சென்ற பக்தர்கள் 7 பேர் பலி

1 mins read
4d123711-6e5d-473c-80b0-79c990a111f8
விபத்தில் சிக்கி எரியும் ஹெலிகாப்டர். அதில் இருந்து சிதறிய பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. படம்: தகவல் ஊடகம் -

அம­ரா­வதி: கேதார்­நாத் அருகே நிகழ்ந்த ஹெலி­காப்­டர் விபத்­தில் அதன் விமானி உட்­பட ஏழு பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

விபத்­தில் பலி­யான பய­ணி­கள் ஆறு பேரும் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்­கக்­கூ­டும் என ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

டெல்­லியை மைய­மா­கக் கொண்டு இய­ங்கி வரும் ஆர்­யன் தனி­யார் விமான நிறு­வ­னம், உத்தரா­கண்ட் மாநி­லத்­தில் உள்ள கேதார்­நாத் ஆன்­மீகத் தலத்­துக்குச் செல்ல ஹெலி­காப்­டர் சேவை அளித்து வரு­கிறது.

நேற்று இந்­நி­று­வ­னத்­தின் ஹெலி­காப்­ட­ரில் கேதார்­நாத் செல்­லும் பக்­தர்­கள் ஏழு பேர் பய­ணம் மேற்­கொண்­ட­னர். காலை வேளை­யில் வானம் மேக­மூட்­டத்­து­டன் இருந்த நிலை­யில், விமா­னி­களுக்கான காட்­சித் தெளிவும் குறைவாகவே இருந்­துள்­ளது.

எனி­னும் பக்­தர்­க­ளு­டன் பத்­தி­ர­மாக கேதார்­நாத் சென்­ற­டைந்­தது அந்த ஹெலி­காப்­டர். பின்­னர் அங்­கி­ருந்து டெல்லி நோக்கி புறப்­பட்­டது. எனி­னும் மேலெ­ழுந்து பறந்­த­போது, கருட் சாட்டி என்ற இடத்­தில் மலைப்­ப­குதி ஒன்­றில் மோதி அது விபத்­துக்­குள்­ளா­னது.

இதை­ய­டுத்து மீட்­புப்­ப­டை­யி­னர் அப்­ப­கு­திக்கு விரைந்­த­னர். பனி­மூட்­டம் நில­வி­ய­தால் ஹெலி­காப்­டரை இயக்­கு­வ­தில் விமானி சிக்கலை எதிர்­கொண்­ட­தா­க­வும் அதுவே விபத்­துக்குக் கார­ணம் என்­றும் முதற்­கட்­டத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த விபத்­தில் சென்­னை­யைச் சேர்ந்த ஏழு பேர் பலி­யா­கி­னர். இவர்­கள் அனை­வ­ரும் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இந்த விபத்து தொடர்­பாக பிரதமர் மோடி, மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஜோதி­ரா­தித்யா சிந்­தியா உள்­ளிட்­டோர் இரங்­கல் தெரி­வித்­துள்­ள­னர்.