இருசக்கர வாகனத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்றனர்

இருசக்கர வாகனத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்றனர்

2 mins read
3b1ed98a-8c5c-42e1-b116-1ba8046dcecb
-

புவ­னேஸ்­வர்: கடனை உரிய நேரத்­தில் திருப்­பிச் செலுத்­தாத இளை­யரை கயிறு மூலம் இரு­சக்­கர வாகனத்­து­டன் சேர்த்­துக் கட்டி, சாலை­யில் இழுத்­துச் சென்­ற­வர்­களி­டம் ஒடிசா மாநில காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

கட்­டாக் நக­ரைச் சேர்ந்த 22 வய­தான ஜெக­நாத் என்­ப­வர் தமது பாட்­ட­னா­ருக்கு இறு­திச்­ச­டங்கு செய்­வ­தற்­காக ரூ.1,500 கடன் வாங்கி உள்­ளார்.

அவ­ருக்கு கடன் கொடுத்த இரு ஆட­வர்­கள் கடன் தொகையை முப்­பது நாள்­க­ளுக்­குள் தர வேண்­டும் என நிபந்­தனை விதித்­த­தா­கத் தெரி­கிறது. எனி­னும் இதை ஏற்றுக்­கொண்ட ஜெக­நாத்­தால் குறித்த நேரத்­தில் பணத்­தைப் புரட்டி திருப்பித் தர முடி­ய­வில்லை.

இதை­ய­டுத்து, அவ­ருக்கு கடன் கொடுத்த இரு­வ­ரும் நேற்று முன்­தி­னம் ஜெக­நாத்தை சந்­தித்­த­னர். அப்­போது அவர் தம்­மி­டம் பண­மில்லை என்று கூறி­ய­தால் ஆவே­ச­ம­டைந்த இரு­வ­ரும் ஜெக­நாத்­தின் கைகளில் 12 அடி நீள கயிற்­றைக் கட்டி, அதன் மறு­மு­னையை இரு சக்­கர வாக­னத்­து­டன் கட்­டி­னர்.

அதன் பின்­னர் கடன் கொடுத்­த­வர்­கள் அந்த வாக­னத்தை ஓட்ட, கைகள் கயிற்­றால் கட்­டப்­பட்ட நிலை­யில், ஜெக­நாத்­தும் வாக­னத்­தின் பின்னே ஓடி­னார். பொது­மக்கள் நட­மாட்­டம் உள்ள சாலை­யில் சுமார் இரண்டு கிலோ மீட்­டர் இவ்­வாறு ஓடி­னார் ஜெக­நாத்.

எனி­னும் வழி­யில் தென்­பட்ட காவல்­து­றை­யி­னர் யாரும் அவருக்கு உதவ முன்­வ­ர­வில்லை. அவர்­கள் ஜெக­நாத் இழுத்­துச் செல்­லப்­ப­டு­வதை வேடிக்கை மட்­டுமே பார்த்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சுமார் இரு­பது நிமி­டங்­க­ளுக்­குப் பின்­னர் ஜெக­நாத் விடு­விக்­கப்­பட்­டார். எனி­னும் அவர் இழுத்­துச் செல்­லப்­படும் காட்­சி­கள் அடங்­கிய காணொ­ளிப் பதி­வு­கள் சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி, விவா­தங்­களை எழுப்­பி­யுள்­ளன.

இதற்­கி­டையே, ஜெக­நாத்தை துன்­பு­றுத்­திய இரு­வ­ரும் ஒடிசா காவல்­து­றை­யால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.