பில்கிஸ் பானு வழக்கு: 11 பேரை முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசுதான் அனுமதியளித்தது

பில்கிஸ் பானு வழக்கு: 11 பேரை முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசுதான் அனுமதியளித்தது

2 mins read
5e730a5c-44cd-43bd-8a28-4b2c6376dd2e
-

புது­டெல்லி: பில்­கிஸ் பானு பாலி­யல் வழக்­கில் ஆயுள் தண்­டனை பெற்ற குற்­ற­வா­ளி­களை முன்­கூட்­டியே விடு­விக்க மத்­திய அரசு அனு­மதி வழங்­கி­ய­தாக குஜ­ராத் மாநில அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளது.

மத்­திய உள்­துறை அமைச்­சின் அனு­ம­தி­யைப் பெற்ற பிறகே குற்­ற­வா­ளி­கள் 11 பேரும் விடு­விக்­கப்­பட்­ட­தாக குஜ­ராத் அரசு சார்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட பிர­மாணப் பத்­தி­ரத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜ­ராத்­தில் மிகப்­பெ­ரிய அள­வில் கல­வ­ரம் வெடித்­தது. அப்­போது ஏரா­ள­மான அப்­பாவி மக்­கள் தாக்­கப்­பட்­ட­னர். பில்­கிஸ் பானு என்ற இஸ்­லா­மி­யப் பெண், கூட்­டுப் பாலியல் வன்­கொ­டு­மைக்கு உட்­படுத்­தப்­பட்­டார்.

வன்­மு­றை­யா­ளர்­கள் அவ­ரது கண் முன்பே அவ­ரு­டைய மூன்று வயது மகள், உற­வி­னர்­கள் என ஏழு பேரைக் கொன்று குவித்­த­னர். இது தொடர்­பாக பில்­கிஸ் பானு அளித்த புகா­ரின் பேரில் வழக்குப்­பதிவு செய்­யப்­பட்டு குற்­ற­வா­ளி­கள் கைதா­கி­னர்.

2008ஆம் ஆண்டு குற்றவாளிகள் 11 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதி­மன்றம் ஆயுள் தண்­டனை விதித்­தது. இதை­ய­டுத்து கடந்த 15 ஆண்டு­க­ளாக அவர்­கள் கோத்ரா சிறைச்­சா­லை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில், 11 பேரை­யும் குஜ­ராத் அரசு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி விடு­வித்­தது, சமூக ஆர்­வலர்­கள் மத்­தி­யில் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. குஜ­ராத் அர­சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்ள நிலை­யில், குற்­ற­வா­ளி­க­ளின் விடு­த­லையை எதிர்த்து உச்ச நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­யப்­பட்­டது. மனுவை விசா­ரித்த தலைமை நீதி­பதி என்.வி.ரமணா தலை­மை­யி­லான அமா்வு குற்­ற­வா­ளி­கள் விடு­தலை தொடர்­பான விவ­ரங்­களை அடுத்த இரண்டு வாரங்­களில் தாக்­கல் செய்ய வேண்­டும் என குஜ­ராத் அர­சுக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், உச்­ச­ நீ­தி­மன்­றத்­தில் குஜ­ராத் அரசு நேற்று தனது பிர­மா­ணப் பத்­தி­ரத்தை தாக்­கல் செய்­தது.

அதில், நன்ன­டத்தை கார­ண­மாகவே 11 பேரும் முன்­கூட்­டியே விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்­றும் மத்­திய உள்­துறை அமைச்சு இதற்கு அனு­மதி அளித்­தது என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.