59 தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டன

59 தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டன

1 mins read
e566f3d1-120b-4415-a259-7dfc398d2cf9
-

புது­டெல்லி: நாட்­டின் பல்­வேறு மாநிலங்­களில் தயா­ரிக்­கப்­பட்ட தர­மற்ற மருந்­து­களை மத்­திய மருந்து தரக்­கட்­டுப்­பாட்டு வாரி­யம் கண்­டு­பி­டித்­துள்­ளது.

இதை­ய­டுத்து அந்த மருந்­து­கள் குறித்த விவ­ரங்­களை அவ்­வாரி­யம் தனது இணை­யத்­த­ளத்­தில் வெளி­யிட்­டுள்­ளது. மொத்­தம் 59 தர­மற்ற மருந்­து­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் இது தொடர்­பாக அடுத்­த ­கட்ட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாடு முழு­வ­தும் ஆயி­ரக்­க­ணக்­கான மருந்­து­கள் விற்­கப்­ப­டு­கின்­றன. அவை அனைத்­தை­யும் மத்­திய, மாநில அர­சு­க­ளின் கீழ் இயங்­கும் மருந்து தரக்­கட்­டுப்­பாட்டு வாரி­யங்­கள் ஆய்வு செய்­வது வழக்­கம். இதன் மூலம் போலி மருந்­து­களும் கண்­ட­றி­யப்­பட்டு, களை­யெடுக்­கப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யில் கடந்த மாதம் மருந்து தரக்­கட்­டுப்­பாட்டு வாரி­யம் விரி­வான ஆய்வு நட­வ­டிக்கை மேற்­கொண்­டது. அப்­போது 1,456 மருந்து­கள் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டன. அவற்­றுள்ள 59 மருந்­து­கள் தர­மற்­றவை என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அவற்­றுள் பெரும்­பாலானவை காய்ச்­சல், சளி, செரிமான மண்­டல பாதிப்­புக்கு பயன்­ப­டுத்­தப்­படும் மருந்­து­க­ளா­கும். இமா­ச்ச­லப் பிர­தே­சம், உத்தராகண்ட், ஆந்­திரா உள்­ளிட்ட மாநிலங்­க­ளில்­தான் தர­மற்ற மருந்­து­கள் அதிக அள­வில் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.