மும்பை: கேதார் நாத் ஹெலிகாப்டர் விபத்தில் விமானி அனில் சிங் (57) உட்பட ஏழு பேர் பலியாயினர்.
இந்த விபத்து குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் அனில் சிங்கின் மனைவி ஷீரின் அனந்திதா கூறுகையில், "கடைசியாக நேற்று (திங்கள்கிழமை) அவர் என்னிடம் பேசினார். மகளுக்கு உடல்நிலை சரியில்லை. மகள் ஃபேரோஸா சிங்கை பத்திரமாக பார்த்துக்கொள் என்று என்னிடம் தெரிவித்தார்.
"மலைப்பகுதியில் கால நிலை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்று அவர் என்னிடம் கூறியிருக்கிறார். இது ஒரு விபத்து, இதற்காக நான் யாரையும் குறைசொல்லவும் இல்லை யார் மீதும் புகார் அளிக்கப் போவதுமில்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.
அனந்திதா திரைத்துறையில் எழுத்தாளராக உள்ளார்.

