55% இருந்து 16% ஆக குறைந்த இந்தியர்களின் வறுமைக் குறியீடு

55% இருந்து 16% ஆக குறைந்த இந்தியர்களின் வறுமைக் குறியீடு

2 mins read
b776135a-789a-4a4c-9c2a-5f60fdbaf44e
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் வறு­மைக் குறி­யீடு 55.1 விழுக்­காட்­டில் இருந்து 16.4 விழுக்­கா­டா­கக் குறைந்து உள்­ள­தாக நடப்­பாண்­டுக்­கான உல­க­ளா­விய பல பரி­மாண வறு மைக் குறி­யீடு தெரி­வித்­துள்­ளது.

ஐக்­கிய நாடு­கள் சபை­யின் வளர்ச்­சித் திட்ட (யுஎன்­டிபி) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை யில், இந்­தி­யா­வில் கடந்த 15 ஆண்டுகளில் பல பரி­மாண வறுமை நிலையில் இருந்து 41.5 கோடி பேர் மீண்­டுள்­ள­தாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதன்படி, இந்தியர்களின் வறு­மைக்­ குறி­யீடு 55.1 விழுக்­காட்­டில் இருந்து 16.4 விழுக்­கா­டா­கக் குறைந்­துள்­ளதாக இவ்வாண்­டுக்­கான உல­களாவிய பல பரி­மாண வறு­மைக்குறி­யீடு தெரி­வித்­துள்­ளது.

வறு­மை­யைப் போக்­கு­வ­தில் கோவா அதிக வேகம் காட்டி வருவ தாகவும் அத­னைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்­மீர், ஆந்­தி­ரப்பிர­தே­சம், சட்டீஸ்­கர், ராஜஸ்­தான் மாநி­லங்­கள் உள்­ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2015-16 கணக்­கீட்­டின்­படி அதிக ஏழை­க­ளைக் கொண்ட பிரி­வில் 10 மாநி­லங்­கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

2019-2021ல் இப்பிரி­வில் இருந்து வெளி­யே­றிய ஒரே மாநி­ல­மாக மேற்கு வங்­கம் உள்­ளது.

எஞ்­சி­யுள்ள பீகார், ஜார்க்­கண்ட், மேகா­லயா, மத்­தி­யப் பிர­தே­சம், உத்­த­ரப் பிர­தே­சம், அசாம், ஒடிசா, சட்டீஸ்­கர், ராஜஸ்­தான் மாநி­லங்­கள் அந்­தப் பட்­டி­ய­லில் தொடர்ந்து இருந்து வருவதாகவும் ­ஐக்­கிய நாடு­கள் சபை­யின் வளர்ச்­சித் திட்ட அமைப்பு தெரிவித்­துள்­ளது.

வறு­மை­யின் பிடி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கா­னோர் மீண்­டுள்­ளது மிகப்­பெ­ரிய வர­லாற்று மாற்­ற­மா­கும்.

இருப்­பி­னும், 2020ஆம் ஆண்டு நில­வ­ரப்­படி, இந்­தி­யா­வில் 22 கோடியே 89 லட்­சம் ஏழை­கள் உள்ளனர். உல­க­ள­வில் பார்க்­கும்­போது இந்­தி­யா­வில் ஏழை­க­ளின் எண்­ணிக்கை மிக அதிக அள­வில் உள்­ளது. இத­னால், ஏரா­ள­மான சவால்­களும் தொடர்ந்து வருவ தாகவும் அமைப்பு சுட்­டிக் காட்டி உள்­ளது.