புதுடெல்லி: இந்தியாவின் தற்காப்பு அமைச்சு, வடக்கு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக 1,000 வேவு ஹெலிகாப்டர்களையும் 80 தொலைதூரக் கட்டுப்பாட்டு குட்டி விமானங்களையும் வாங்க திட்டமிடுகிறது.
இந்திய ராணுவத்தின் தேவைகளை ஈடுசெய்யும் வகையில், கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள் கொள்முதல் திட்டம் வேகப்படுத்தப்படுகிறது என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
அதே போல, ராணுவத்திற்குத் தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தக்கூடிய 80 சிறு ரக விமானங்களை வாங்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

