விபத்தில் குறைந்தது 15 பேர் மரணம், பலர் காயம்

விபத்தில் குறைந்தது 15 பேர் மரணம், பலர் காயம்

1 mins read
89aa5db1-4833-4413-b01a-4f103d83b5ff
-

குவா­லி­யர்: மத்­தியப் பிர­தே­சத்­தின் ரேவா மாவட்­டத்­தில் சுஹாகி பஹரி பகுதி அரு­கில் நிகழ்ந்த சாலை விபத்­தில் குறைந்­தது 15 பேர் மாண்­ட­னர்; ஏறத்­தாழ 40 பேர் காய­ம் அடைந்­த­னர்.

பேருந்­தும் லாரி­யும் மோதிக்­கொண்­ட­தில் விபத்து ஏற்­பட்­டது.

காய­ம­டைந்­த­வர்­களில் 20 பேர் உத்­த­ரப் பிர­தே­சத்­தின் பிர­யாக்­ராஜ் மாவட்­டத்­தில் உள்ள மருத்­து­வ­ம­னைக்­குச் சிகிச்­சைக்­காக கொண்டு செல்­லப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

தெலுங்­கானா தலை­ந­கர் ஹைத­ரா­பாத்­தி­லி­ருந்து கோரக்­பூர் நோக்கி அந்­தப் பேருந்து சென்­று­கொண்­டி­ருந்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது.

அதில் பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்­த­வர்­கள் அனை­வ­ரும் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என ரேவா மாவட்ட காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

விபத்­தில் சிக்­கி­ய­வர்­களை மீட்­கும் பணி­யில் காவல்­து­றை­யி­னர் ஈடு­பட்­ட­னர்.

விபத்து நிகழ்ந்­த­தற்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிய விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

விபத்­தில் மாண்­டோ­ரின் குடும்­பங்­க­ளுக்கு உத்­த­ரப் பிர­தேச முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் இரங்­கல் தெரி­வித்து உள்­ளார்.

"மத்­தியப் பிர­தேச முதல்­வ­ரி­டம் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்­கான சிகிச்சை பற்றி பேசி­னேன். விபத்­தில் உயி­ரி­ழந்த உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்தாரின் உடல்களை அவர்­

க­ளது சொந்த ஊருக்­குத் திரும்ப கொண்டு வரு­வது பற்­றி­யும் பேசி­னேன்.

"உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­குத் தலா ரூ.2 லட்­சம் மற்­றும் காய­ம­டைந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­குத் தலா ரூ.50,000 வழங்­கப்­படும்," என்று யோகி ஆதித்­ய­நாத் டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி­யும் விபத்­தில் இறந்தவர்­

க­ளின் குடும்­பங்­க­ளுக்கு இரங்­கல் தெரி­வித்­தார்.