புதுடெல்லி: தீபாவளியை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தியில் பிரம்மாண்ட தீப விழா நடந்து வருகிறது.
சரயு ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றி வழிபடும் இந்த நிகழ்ச்சி ஆறாவது முறையாக இந்த ஆண்டும் நடக்கிறது.
இந்த பிரம்மாண்ட தீப விழாவை பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
அதையடுத்து, சரயு ஆற்றங்
கரையில் ஆரத்தி வழிபாட்டிலும் அவர் பங்கேற்க இருக்கிறார்.
அதற்கு முன்பு திரு மோடி அயோத்தியில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.
அங்குள்ள ராமர் கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் ராமர் ேகாயில்
கட்டுமானப் பணிகளை திரு மோடி ஆய்வு செய்வார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெறும் விழாவில் 11 ராம்லீலா அலங்கார ஊர்திகள், அனிமேஷன் ஊர்திகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.
அத்துடன் பல்வேறு மாநிலங்
களைச் சேர்ந்த கலைஞர்களின்
நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன.
அயோத்தி தீப விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல்முறையாகப் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
தீப விழாவை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்புப் பணிகளை உத்தரப் பிரதேச காவல்
துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

