ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து செய்யப்பட்டது

ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து செய்யப்பட்டது

1 mins read
16356c0f-fe5b-44b2-8852-f9a5782e67dc
-

புது­டெல்லி: வெளி­நா­டு­க­ளி­

லி­ருந்து நிதி­பெ­று­வது தொடர்­பான விதி­மு­றை­களை ராஜீவ் காந்தி அறக்­கட்­டளை மீறி­ய­தா­கக் குற்­றச்­சாட்டு எழுந்­தது.

இத­னால் ராஜீவ் காந்தி அறக்­கட்­டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறு­வ­னம் மற்­றும் இந்­திரா காந்தி நினைவு அறக்­கட்­டளை ஆகிய மூன்று அறக்கட்­ட­ளை­களில் சட்ட விதி­முறை மீறல் ஏதும் நடந்­துள்­ளதா என்­பது குறித்து விசா­ரணை நடத்த மத்­திய அரசு ஒரு குழுவை அமைத்­தது.

இந்நிலை­யில், வெளி­நாடுகளிலிருந்து நிதி­பெ­று­வ­து தொடர்பான விதி­மு­றை­களை ராஜீவ் காந்தி அறக்­கட்­ட­ளை­ மீறியதாகக் கூறி அதன் உரி­மத்தை ரத்து செய்ய மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. ராஜீவ் காந்தி அறக்­கட்­ட­ளை­யின் தலை­வ­ராக சோனியா காந்தி, உறுப்­பி­ன­ராக முன்­னாள் இந்தியப் பிர­த­மர் மன்­மோ­கன் சிங் இருக்­கின்­ற­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.