பெங்களூரு: பாஜக சட்டமன்ற உறுப்பினரும் கர்நாடக சட்ட
மன்றத் துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி உடல்நலக்
குறைவால் தனியார் மருத்துவ
மனையில் காலமானார்.
அவருக்கு வயது 56.
ஆனந்த் மாமணி, சவுதாட்டி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்தவர். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
"எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் மாநில சட்டமன்றத் துணை சபாநாயகருமான ஆனந்த் சந்திரசேகர் மாமணியின் மறைவு குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.
"அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆனந்த் மாமணியின் இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் வழங்கட்டும்," என்று திரு பசவராஜ் பொம்மை டுவிட்டரில் பதிவிட்டார். ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் மாமணியும் 1990களில் துணை சபாநாயகராகப் பதவி வகித்தவர்.

