தனியாகப் பணிபுரிந்த தாதியைச் சீரழித்த கும்பல்

தனியாகப் பணிபுரிந்த தாதியைச் சீரழித்த கும்பல்

1 mins read
bda59a1b-a2ab-4d51-8559-4db960670031
-

ராய்ப்­பூர்: சத்­தீஷ்­கரில் உள்ள சிப்­சிப்பி கிரா­மத்­தில் சுகா­தார மையம் ஒன்­றில் தாதி ஒரு­வர் இந்­திய நேரப்­படி கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் தனி­யாகப் பணி­

பு­ரிந்­து­கொண்­டி­ருந்­தார்.

இதனை அந்­தப் பகு­தி­யில் சுற்­றித் திரிந்து கொண்­டி­ருந்­த­போது, கவ­னித்த 17 வயது சிறு­வன் உள்­ளிட்ட நான்கு பேர் மையத்­துக்­குள் புகுந்து அந்­தத் தாதி­யைக் கட்­டிப்­போட்­டுள்­ள­னர்.

அதன்­பின், அவ­ரது வாயில் துணியை வைத்து அடைத்து விட்டு, பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­னர்.

பிறகு ஒரு­வ­ழி­யாக வீட்­டுக்­குச் சென்ற தாதி, சம்­ப­வம் குறித்து தமது பெற்­றோ­ரி­டம் கூறி­னார். இது­கு­றித்து காவல்­து­றை­யி­டம் புகார் அளிக்­கப்­பட்­டது.

தாதி­யர் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளா­ன­தைக் கண்­டித்த சத்­தீஷ்­கர் பாஜ­க­வி­னர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

அர­சாங்­கம் உரிய பாது­காப்பு அளிக்­கா­விட்­டால் தூர­மாக, ஆள் நட­மாட்­டம் அதி­க­மில்­லாத பகு­தி­களில் பணி­பு­ரி­ய­மாட்­டோம் எனச் சுகா­தார பணி­யா­ளர்­களில் ஒரு பிரி­வி­ன­ரும் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இதனைத் தொடர்ந்து, தாதி­ய­ரைப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­வர்­களில் மூவரை காவல்­

துறை­யி­னர் கைது செய்­த­னர்.

தப்­பி­யோ­டிய ஒரு­வரை காவல்­து­றை­யி­னர் வலை­வீ­சித் தேடு­கின்­ற­னர்.