தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை மூலம் ரூ.41,500 கோடி வருவாய் ஈட்ட இந்தியா திட்டம்

2 mins read
3d8f5474-6695-4a58-b9bf-e345a0e2ab31
-

புது­டெல்லி: உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­படும் பிரம்­மோஸ் ஏவு­க­ணை­களை வாங்­கு­வ­தற்கு பிலிப்­பீன்ஸ், வியட்­நாம், மலே­சியா, இந்­தோ­னீ­சியா, சவூதி அரே­பியா, தென்­ஆப்­பி­ரிக்கா உள்­ளிட்ட பல்­வேறு நாடு­கள் விருப்­பம் தெரி­வித்­துள்­ள­தாக மத்­திய தற்­காப்பு அமைச்சு கூறி­யுள்­ளது.

இதை­ய­டுத்து எதிர்­வ­ரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் பிரம்­மோஸ் ஏவு­க­ணை­களை அந்­நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­வ­தன் மூலம் 41,500 கோடி ரூபாய் வரு­வாய் ஈட்ட வேண்­டும் என மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்­துள்­ள­தாக அந்த அமைச்சு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன.

நீர்­மூழ்­கி­கள், போர்க்­கப்­பல்­கள், போர் விமா­னங்­கள் என அனைத்து வகை போர்த் தளங்­களில் இருந்­தும் ஏவக்­கூ­டிய வகை­யில் பிரம்­மோஸ் ஏவு­க­ணை­கள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன. உல­கின் அதி­வேக சூப்­பர்­சா­னிக் ஏவு­கணை என்ற பெரு­மை­யைப் பெற்­றுள்­ளது பிரம்­மோஸ்.

சுமார் 28 அடி­நீ­ளம், 2 அடி விட்­டம், 3,000 கிலோ எடை­கொண்ட இந்த ஏவு­கணை ஒலி­யை­விட மும்­ம­டங்கு வேகத்­தில் சென்று இலக்­கு­க­ளைத் தாக்க வல்­லது. ஆகக் கடை­சி­யாக மேற்­கொண்ட சோத­னை­யின்­போது, இந்த ஏவு­கணை 450 கிலோ மீட்­டர் தூரம் பாய்ந்து இலக்கை தாக்­கி­யது.

இந்­நி­லை­யில் அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள் பிரம்­மோஸ் ஹைப்­பர்­சா­னிக் ஏவு­கணை உற்­பத்­தியைத் தொடங்க இந்­திய அரசு முடிவு செய்­துள்ளது. மேலும், செயற்­கைக்­கோள்­கள் மூலம் பிரம்­மோஸ் ஏவு­க­ணையை விண்­ணில் ஏவும் ஆராய்ச்­சி­யும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.

இதை­ய­டுத்து, இந்­தி­யா­வி­டம் இருந்து பிரம்­மோஸ் சூப்­பர்­சா­னிக் ஏவு­க­ணை­களை வாங்க பல்­வேறு நாடு­கள் மத்­தி­யில் போட்டி நில­வு­கிறது.

அவற்­றுள் பிலிப்­பீன்ஸ் நாடு சுமார் 3,103 கோடி ரூபாய் மதிப்­புள்ள ஒப்­பந்­தம் ஒன்றை இந்­திய அர­சு­டன் செய்து கொண்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டை­யில் அடுத்த ஆண்டு முதல் அந்­நாட்­டுக்கு பிரம்­மோஸ் ஏவு­க­ணை­கள் அனுப்­பப்­பட உள்­ளன.

வியட்­நாம், மலே­சியா, இந்­தோ­னீசியா உள்­ளிட்ட நாடு­க­ளு­ட­னும் விரை­வில் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த நட­வ­டிக்­கை­யின் மூலம் அடுத்த மூன்று ஆண்­டு­க­ளுக்­குள் ரூ.41,500 கோடி வரு­வாய் இலக்கை எட்ட மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வின் ஆகாஷ் ஏவு­க­ணையை வாங்­க­வும் பல நாடு­கள் விருப்­பம் தெரி­வித்­துள்­ளதாக தற்காப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.