பெண்ணை அறைந்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்

பெண்ணை அறைந்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்

2 mins read
8f94bc9d-905e-44d1-8005-18d06483df72
-

பெங்­க­ளூரு: பொது நிகழ்ச்­சி­யில் தம்­மி­டம் உதவி கோரி வந்த பெண்ணை அறைந்­த­தற்­காக மன்­னிப்பு கோரி­யுள்­ளார் கர்­நா­டக வீட்டு வச­தித்­துறை அமைச்­சர் சோமண்ணா.

நேற்று முன்­தி­னம் சாம்­ராஜ் நகர் மாவட்­டத்­தில் நடை­பெற்ற அரசு நிகழ்ச்­சி­யில் அவர் பங்­கேற்று, ஏழை­க­ளுக்கு இல­வச வீட்டு மனைப்­பட்­டாக்­களை வழங்­கி­னார்.

அப்­போது பட்­டாக்­க­ளைப் பெறு­வ­தில் பய­னா­ளி­கள் இடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது. அந்­தச் சூழ­லில் ஒரு பெண்­மணி, அமைச்­சரை அணுகி தமக்­கும் பட்டா வழங்கி உத­வும்­படி கோரிக்கை விடுத்­தார்.

கூட்­டம் முண்­டி­ய­டித்­த­தால் எரிச்­ச­ல­டைந்த அமைச்­சர் சோமண்ணா, கோபத்­தில் அந்­தப் பெண்ணை அறைந்­தார். இது தொடர்­பான காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டது.

இதை­ய­டுத்து எதிர்க்­கட்­சி­கள், அமைச்­சர் விளக்­கம் அளிக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தின. எனி­னும் தொடக்­கத்­தில் அமைச்­சர் வாய் திறக்­க­வில்லை.

அவ­ரது அமைச்சு அலு­வ­ல­கம் வெளி­யிட்ட காணொ­ளிப் பதிவு ஒன்­றில், அமைச்­ச­ரால் தாக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் பெண் தோன்றி, அமைச்­சர் தமக்கு உத­வு­வ­தா­கக் கூறி­னார் என்­றும் தம்மை கன்­னத்­தில் அறை­ய­வில்லை என்­றும் குறிப்­பி­டு­கி­றார். அந்­தக் காணொ­ளி­யில் அவர் தம் குழந்­தை­க­ளு­டன் காணப்­ப­டு­கி­றார்.

இதற்­கி­டையே, அந்­தப் பெண்­ணி­டம் தாம் தவ­றாக நடந்து கொள்­ள­வில்லை என­வும் யார் மன­மா­வது புண்­பட்­டி­ருந்­தால் அதற்­காக மன்­னிப்பு கோரு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

"நிகழ்ச்சி முடிந்­த­வு­டன் பிரச்சினையைத் தீர்த்து வைப்­ப­தாக கூறி, அந்­தப் பெண்ணை ஓர­மாக ஒதுங்கி நிற்க வைக்க முயற்சி செய்­தேன். கடந்த நாற்­பது ஆண்­டு­க­ளாக அர­சி­ய­லில் உள்­ளேன். பெண்­கள் மீது மிகுந்த மரி­யாதை வைத்­துள்­ளேன்,"என்று அமைச்­சர் சோமண்ணா விளக்­கம் அளித்­துள்­ளார்.

எனி­னும் எதிர்க்­கட்­சி­கள் அவரை விடு­வ­தாக இல்லை.

இதற்­கி­டையே, சமூக ஊட­கங்­களில் வாக்­கு­வா­தங்­கள் முற்­றி­யுள்ள நிலை­யில், அமைச்­சர் சோமண்ணா­வி­டம் கர்­நா­டக முதல்­வர் இந்­தச் சர்ச்சை தொடர்­பாக விளக்­கம் கேட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அவருக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாக கன்னட ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.