புதுடெல்லி: சிட்ராங் சூறாவளித் தாக்குதலால் பங்ளாதேஷ் மீனவர்கள் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் படகில் இருந்த 20 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். இதன்பின்னர், கடலில் மிதந்த கட்டை ஒன்றைப் பிடித்துக்கொண்டு உதவிக்காக வெகுநேரம் கடலில் தத்தளித்தனர்.
இந்த நிலையில், அந்த வழியே இந்திய கடலோரக் காவல் படையின் விமானம் ஒன்று சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு இருந்தது. இதில், நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வங்காளதேச மீனவர்களை இந்திய படை வீரர்கள் கவனித்தனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு மீனவர்கள் அனைவரையும் உயிருடன் மீட்டு வங்காள தேசத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

