பேருந்துக்குள் தீபாவளி கொண்டாடிய இருவர் பலி

பேருந்துக்குள் தீபாவளி கொண்டாடிய இருவர் பலி

1 mins read
43295499-d8d0-493d-9242-28aed6915622
-

ராஞ்சி: ஜார்க்­கண்ட் மாநி­லத்­தில், தீபா­வளி நாளில் பேருந்­துக்­குள் விளக்­கு­களை ஏற்­றி­விட்டு, அதற்­குள் படுத்­து­றங்­கிய ஓட்­டு­ந­ரும் உத­வி­யா­ள­ரும் தீயில் கருகி பலி­யா­கி­னர்.

ஜார்க்­கண்ட் மாநி­லம் ராஞ்சி அருகே, வாகன நிறுத்­து­மி­டத்­தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த பேருந்து ஒன்று திடீ­ரென தீப்­பற்றி எரிந்­த­தில் அதில் இருந்த இரண்டு பேர் உடல் கருகி பலி­யா­னது தொடர்­பாக விசா­ரணை நடை­பெற்­றது.

விசா­ர­ணை­யில், அவர்­கள் பேருந்­துக்­குள் விளக்­கு­க­ளை­யும் மெழு­கு­வர்த்­தி­யையும் ஏற்றி வைத்­தி­ருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

விளக்­கு­களும் மெழு­கு­வர்த்­தி­யும் ஏற்­றப்­பட்­டி­ருந்­த­தால் பேருந்­துக்­குள் தீப்­பற்­றி­ய­தா­க­வும், இதில் பேருந்­துக்­குள் உறங்­கிக்கொண்­டி­ருந்த இளை­யர் ஒரு­வ­ரும் முதி­ய­வர் ஒரு­வ­ரும் உடல் கருகி பலி­யா­கி­னர்.

இந்­தச் சம்­ப­வம் செவ்­வாய்க்­கிழமை நள்­ளி­ரவு ஒரு மணிக்கு நடந்­தது.

பேருந்­துக்­குள் விளக்­கு­கள் மற்­றும் மெழு­கு­வர்த்­தி­களை ஏற்­றி­விட்டு ஓட்­டு­ந­ரும் உத­வி­யா­ள­ரும் வழி­பாடு செய்­த­னர். அப்­போது காற்­ற­டித்து விளக்­கு­கள் அணைந்து­வி­டா­மல் இருக்க பேருந்­தின் கத­வு­க­ளை­யும், சன்­னல்­க­ளை­யும் மூடி­னர். விளக்கை அணைக்க மறந்­த­வாறு இரு­வ­ரும் பேசிக்­கொண்டே உறங்­கி­விட்­ட­னர்.

இரு­வ­ரும் மது­போ­தை­யில் இருந்­த­தால், பேருந்­துக்­குள் தீப்­பற்­றி­ய­தும் கூட தெரி­யா­மல் மயக்­க­நிலை­யில் இருந்­த­தால் அவர்­க­ளால் தப்­பித்து ஓட முடி­ய­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.