ஆளுநர் மாளிகை நோக்கி விவசாயிகள் பேரணி

ஆளுநர் மாளிகை நோக்கி விவசாயிகள் பேரணி

1 mins read
e82f4158-d5fd-4d02-90a8-9bd66e0d3aee
-

புது­டெல்லி: புதிய வேளாண் சட்­டங்­களைத் திரும்­பப் பெற வலி­யு­றுத்தி டெல்­லி­யில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்­ப­ரில் விவ­சா­யி­கள் போராட்­டம் தொடங்­கி­னர். இப்­போராட்­டம் ஓராண்­டுக்கு மேல் நீடித்­தது. விவ­சா­யி­க­ளின் பெரும்­பா­லான கோரிக்­கை­கள் ஏற்­கப்­பட்­ட­தால் போராட்­டம் முடி­வுக்கு வந்­தது. எனி­னும் பல்­வேறு கோரிக்­கை­கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என விவ­சா­யி­கள் புகார் கூறி வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில் பல்­வேறு விவ­சா­யி­கள் சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பான சம்­யுக்த கிசான் மோர்ச்சா நேற்று அறிக்கை விடுத்துள்ளது. அதில், எஸ்­கே­எம் ஒருங்­கி­ணைப்புக் குழு மற்­றும் வரை­வுக்­குழு கூட்­டம் காணொலி வாயி­லாக நடை­பெற்­றது. டெல்­லி­யில் விவ­சா­யி­கள் நடத்­திய போராட்­டத்­தின் 2ஆம் ஆண்டு தினத்­தை­யொட்டி நவம்­பர் 26ஆம் தேதி நாடு முழு­வ­தும் மாநி­லத் தலை­ந­க­ரங்­களில் ஆளு­நர் மாளிகை நோக்கி விவ­சா­யி­கள் பேரணி நடத்த முடிவு செய்­யப்­பட்­டது. இந்­தப் பேர­ணி­யில் விவ­சா­யி­கள் திர­ளா­கப் பங்­கேற்க வேண்­டும்" என்று கூறப்­பட்­டுள்­ளது.