உக்ரேன்: இந்திய தூதரகம் எச்சரிக்கை

உக்ரேன்: இந்திய தூதரகம் எச்சரிக்கை

1 mins read
51e50f53-1bf0-4712-80cb-b116c4e629d3
-

புது­டெல்லி: உக்­ரே­னில் போர் தீவிரம் அடைந்து வரு­வ­தாக அங்­குள்ள இந்­திய தூத­ர­கம் தெரி­வித்­துள்­ளது. எனவே இந்­தி­யர்­கள் அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யேற வேண்­டும் என தூத­ர­கம் ஓர் அவ­சர அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது.

அதில், ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடையே நடக்­கும் போர் நாளுக்கு நாள் தீவி­ரம் அடைந்து வரு­வ­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"உக்­ரே­னில் இன்­னும் தங்கி­உள்ள இந்­தி­யர்­கள் எந்­தெந்த வழி­களில் வாய்ப்­பு­கள் உள்ளனவோ, அவற்­றைப் பயன்­ப­டுத்­திக்கொண்டு வெளி­யேற வேண்­டும்.

"இது தொடர்­பாக உதவிகள் தேவைப்­பட்­டால், இந்­திய தூதரகத்துடன் தொடர்பு கொள்­ள­லாம்," என அந்த அறிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 19ஆம் தேதி­தான் இந்­தி­ய தூத­ர­கம் இதே­போன்ற அறி­விப்பை வெளி­யிட்­டது.

இந்­நி­லை­யில், ஒரு வாரத்­துக்­குள் இரண்­டா­வது அறி­விப்பு வெளி­யாகி உள்­ளது.