வறுமை, பருவநிலையால் இந்தியாவில் 22 கோடி சிறார்கள் பாதிப்பு என ஆய்வில் தகவல்

வறுமை, பருவநிலையால் இந்தியாவில் 22 கோடி சிறார்கள் பாதிப்பு என ஆய்வில் தகவல்

2 mins read
b5e82fc5-4a8d-4ea5-8232-cf3eb4e92a50
-

புது­டெல்லி: இந்தியா முழு­வ­தும் வறுமை­யா­லும் பல்வேறு பரு­வ­நிலை மாற்­றங்­க­ளா­லும் சுமார் 22.20 கோடி சிறார்­கள் பாதிப்புக்கு ஆளாவதாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இந்த எண்­ணிக்கை உலக அள­வில் சுமார் 77.40 கோடி­யாக உள்­ள­தாக அண்­மை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட விரி­வான ஆய்வு முடி­வு­கள் தெரி­விக்­கின்­றன.

'சேவ் தி சில்ட்­ரன்' என்ற சிறார்­கள் உரிமை அமைப்­பும் பிர­சல்ஸ் நக­ரில் உள்ள விரிஜே பல்­க­லைக்­க­ழ­க­மும் இந்த ஆய்வை மேற்­கொண்­டன.

சிறார்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய பல்­வேறு பாதிப்­பு­கள் குறித்து இந்த ஆய்­வில் கவ­னம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

கம்­போ­டியா நாட்­டில்­தான் பெரு­ம­ளவு சிறார்­கள்­ வறுமை, பரு­வ­நிலை தாக்­கம் என இரட்டை அச்­சு­றுத்­தலைச் சந்­திப்­ப­தாக ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. அங்கு சுமார் 72 விழுக்காடு சிறார்­கள் இந்த அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்­டுள்­ள­னர்.

64 விழுக்காடு சிறார்­கள் பாதிப்­புக்கு ஆளா­வதை அடுத்து இந்­தப் பட்டியலில் மியன்­மார் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது.

ஆப்­கா­னிஸ்­தா­னில் 57 விழுக்­காடு சிறார்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தால் மூன்­றா­வது இடத்­தில் உள்­ளது அந்­நாடு.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் மொத்­த­முள்ள சிறார்­களில் 51 விழுக்­காட்­டி­னர் வறுமை, பருவ நிலை­யால் பாதிப்­புக்கு ஆளா­வதாக மேற்­கு­றிப்­பிட்ட ஆய்வு முடி­வு­கள் தெரி­விக்­கின்­றன. அதா­வது, 22 கோடியே 20 லட்­சம் குழந்­தை­கள் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

மேலும், 35.19 கோடி சிறார்­கள் ஆண்­டு­தோ­றும் ஏதே­னும் ஒரு பரு­வ­நிலை நிகழ்­வால் பாதிக்­கப்­படு­வ­தா­க­வும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஆய்வு முடி­வு­கள் கூறு­கின்­றன.

அனைத்து மாநி­லங்­க­ளி­லும் சிறார்­கள் பலர் இரட்டை அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்டு வந்­தா­லும், கேரளா, அசாம் போன்ற மாநிலங்­களில் ஏற்­படும் வெள்­ளப்­பெ­ருக்கு, புயல் கார­ண­மா­கத்­தான் ஏரா­ள­மான சிறார்­கள் வறுமை நிலைக்கு ஆட்­ப­டு­வ­தாக இந்தப் புதிய ஆய்வு தெரி­விக்­கிறது.

அதிக வரு­மானம் உள்ள நாடு­களில் வசிக்­கும் சிறார்­கள்­கூட வறுமை, பரு­வ­நிலை பிரச்­சி­னை­களில் இருந்து தப்­பிக்­க­வில்லை.

அந்­நா­டு­க­ளைச் சேர்ந்த சுமார் 12.10 கோடி சிறார்­கள் இரட்டை அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தி­யில் வாழ்ந்து வரு­வ­தாக அண்மையில் நடைபெற்ற விரிவான ஆய்­வின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.