புதுடெல்லி: மத்திய அரசால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்ட பத்து பேரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், ஹிஸ்புல் முஜாகிதீன் (எச்எம்), லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உட்பட தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த பத்து உறுப்பினர்களை இந்திய உள்துறை அமைச்சு கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தீவிரவாதிகளாக அறிவித்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சு வெளியிட்டது.
பாகிஸ்தானின் ஹபிபுல்லா மாலிக் என்கிற சாஜித் ஜுட், ஜம்மு காஷ்மீரின் பராமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த பஷீத் அகமது ரெசி, ஜம்மு-காஷ்மீரின் சோப்போர் நகரத்தைச் சேர்ந்த இம்தியாஸ் அகமது காண்டூ என்கிற சாஜித், பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாபர் இக்பால் என்கிற சலீம், புல்வாமாவைச் சேர்ந்த ஷேக் ஜமீல்-உர்-ரெஹ்மான் என்கிற பிலால் அகமது பெய்க் உள்ளிட்ட இந்த பத்து பேரின் வங்கிக் கணக்கு விவரங்களை வங்கிகள் மத்திய அரசுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

