கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்; ஏராளமான வாத்துகளைக் கொல்ல முடிவு

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்; ஏராளமான வாத்துகளைக் கொல்ல முடிவு

1 mins read
e786fa3d-1f68-4f1d-ae0f-f1a3d764734c
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லத்­தின் ஆலப்­புழா, கோட்­ட­யம் மாவட்­டங்­களில் ஏரா­ள­மான வாத்­துப் பண்­ணை­கள் உள்­ளன. இங்கு வளர்க்­கப்­படும் வாத்­து­க­ளுக்கு அடிக்­கடி பற­வைக் காய்ச்­சல் நோய் பர­வு­கிறது. இது மனி­தர்­க­ளுக்­கும் பர­வா­மல் இருப்­ப­தற்­காக இங்­குள்ள பகு­தி­களில் வளர்க்­கப்­படும் வாத்­து­கள், பற­வை­கள் கொல்­லப்­ப­டு­வது வழக்­கம்.

கேரள மாநி­லத்­தின் ஆலப்­புழா மாவட்­டத்­தின் ஹரிப்­பாடு வழு­தா­னம் அருகே உள்ள சில பண்­ணை­களில் வளர்க்­கப்­பட்ட இரண்­டா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்ட வாத்­து­கள் மடிந்­து­போ­யின.

இதை­ய­டுத்து அங்­குள்ள வாத்­து­க­ளின் ரத்த மாதி­ரி­கள் சோதனை செய்து பார்க்­கை­யில், எச்5 என்1 தொற்று வாத்­து­க­ளுக்­குப் பர­வி­யிருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

தொடர்ந்து நேற்று ஆலப்­புழா மாவட்ட ஆட்­சி­யர் தலை­மை­யில் கால்­நடை பாது­காப்­புத் துறை அதி­கா­ரி­க­ளின் அவ­சர ஆலோ­ச­னைக் கூட்­டம் நடந்­தது.

இதில் ஹரிப்­பாடு வழு­தா­னம் பகு­தி­யில் உள்ள இரு­ப­தா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்ட வாத்­து­க­ளைக் கொல்­வ­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அத­னை­ய­டுத்து அப்­ப­குதி சுற்று வட்­டா­ரத்­தைச் சேர்ந்த அனைத்­துப் பற­வை­க­ளை­யும் கொல்ல கூட்­டத்­தில் முடிவு எடுக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து நேற்று முதல் வாத்­து­க­ளைக் கொல்­லும் பணி தொடங்­கி­யது. வழு­தா­னம் பகு­தி­யில் வாத்­து­கள் உட்­பட பற­வை­க­ளைக் கொண்டு வரு­வ­தற்­கும், அங்­கி­ருந்து வெளி­யூர்­க­ளுக்கு பற­வை­க­ளைக் கொண்டு செல்­வ­தற்­கும் தடை­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அந்த பகு­தி­யில் பறவை இறைச்சி மற்­றும் முட்டை விற்­ப­னைக்­கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.