சர்க்கரை ஏற்றுமதி தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

சர்க்கரை ஏற்றுமதி தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

1 mins read
56e181be-db05-4e32-be70-85c270e6219f
சர்க்கரை ஆலையொன்றில் சர்க்கரை மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடை அடுத்த ஆண்டு அக்டோபர் 31 வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: இந்­தியா, சர்க்­கரை ஏற்­று­ம­திக்கு விதித்த தடையை மேலும் ஓராண்­டுக்கு நீட்­டித்­துள்­ளது. இதன்­படி, சர்க்­கரை ஏற்­று­மதி மீதான கட்­டுப்­பா­டு­கள் 2023ஆம் ஆண்டு அக்­டோ­பர் 31ஆம் தேதி வரை நீ­டிக்கும்.

இந்­தி­யா­வின் உள்­நாட்­டுத் தேவை­யைப் பூர்த்தி செய்­ய­வும் போதுமான அளவு சர்க்­கரை இருப்­பில் இருப்­பதை உறுதி செய்­ய­வும் சர்க்­கரை ஏற்­று­மதிக்கு விதிக்கப் பட்ட தடை மேலும் ஓராண்­டுக்கு நீட்­டிக்­கப்­படு­வ­தாக இந்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக வெளி­நாட்டு வர்த்­தக இயக்­கு­ந­ர­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "சர்க்­கரை ஏற்­று­மதி மீதான கட்­டுப்­பா­டு­கள் 2022 அக்­டோ­பர் 31ஆம் தேதி­யைத்­தாண்டி 2023 அக்­டோ­பர் 31ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­படு­ம். இதர நிபந்­த­னை­களில் எந்த மாற்­ற­மும் இல்லை" என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இருந்தாலும் இடைப்­பட்ட காலத்­தில் மறு பரி­சீ­லனை செய்­யப் ­பட்டுத் தடை நீக்­கப்­ப­ட­லாம் என்றும் கூறப்­ப­டு­கிறது.

அமெரிக்காவுக்கு விலக்கு

இது மட்­டு­மல்­லா­மல் சிறப்பு ஒப்­பந்­தங்­க­ளின் கீழ் அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கு அனுப்­பப்­படும் சர்க்­க­ரைக்கு இந்­தத் தடை பொருந்­தாது. உல­க­ சர்க்­கரை உற்­பத்­தி­யில் இந்­தியா முதல் இடத்­தில் இருந்து வரு­கிறது. நடப்பு ஆண்­டில் சர்க்­கரை ஏற்­று­ம­தி­யில் இந்­தியா இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது. 2022-23ஆம் சந்தை பரு­வத்­தில் இந்­தி­யா­வின் சர்க்­கரை உற்­பத்தி 36.5 மில்­லி­யன் டன்­னாக இருக்­கும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 2021-22ஆம் சந்தை பரு­வத்­தில் இந்­தியா 35.8 மில்­லி­யன் டன் சர்க்­க­ரையை உற்­பத்தி செய்­தது.