புதுடெல்லி: இந்தியாவின் தேர்தல் ஆணையம் நடத்தும் இரண்டு நாள் அனைத்துலக மாநாடு இன்று புது டெல்லியில் தொடங்குகிறது.
மாநாட்டின் கருப்பொருள் 'தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு, கட்டமைப்பு மற்றும் திறன்' என்பதாகும்.
மாநாட்டைத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைக்கிறார். நிறைவு அமர்வுக்குத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே தலைமை ஏற்றுள்ளார்.
'தேர்தல் நேர்மை' குறித்த கூட்டு அமைப்பிற்குத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் தேர்தல் இந்திய ஆணையம், கூட்டு அணுகுமுறையை மேற்கொள்ள கிரீஸ், மொரீஷியஸ் மற்றும் 'ஐஎப்இஎஸ்' எனும் அனைத்துலக தேர்தல் நடைமுறை அற நிறுவனம் ஆகியவற்றை இணைத் தலைவர்களாக இருக்க அழைப்பு விடுத்துள்ளது.
உலகெங்கிலும் தேர்தல்களை நடத்துவது தொடர்பான தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகளைத் தவிர, யுஎன்டிபி போன்ற அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
ஆர்மீனியா, மொரீஷியஸ், நேப்பாளம், கேபே வெர்டே, ஆஸ்தி ரேலியா, சிலி, ஃபெடரல் ஸ்டேட்ஸ் ஆஃப் மைக்ரோனேசியா, கிரீஸ், பிலிப்பீன்ஸ், சாவோ டோம் பிரின்சிப், அமெரிக்கா மற்றும் மூன்று அனைத்துலக அமைப்புகளான 'ஐடிஇஏஇஎஸ்', 'ஐஎப்இஎஸ்', 'யுஎன்டிபி' உட்பட 11 நாடுகள், அமைப்பு களிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள தூதரகங்கள் மூலம் மேலும் பல நாடுகள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு அமர்வுகளில் 'தேர்தல் நேர்மையை' உறுதி செய்வ தற்கான பங்கு மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து, தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விவாதிக்கப்படும்.
தொடக்க அமர்வு தலைமை உரை ஆற்றும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடை பெறும்.
நவம்பர் 1ஆம் தேதி நடை பெறும் மாநாட்டின் நிறைவு அமர் வில் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே உரையாற்றுகிறார்.

