ரூ.22,000 கோடி மதிப்பில் விமானப்படை விமானங்களைத் தயாரிக்க தொழிற்சாலை இந்திய எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் 200 பயங்கரவாதிகள்

ரூ.22,000 கோடி மதிப்பில் விமானப்படை விமானங்களைத் தயாரிக்க தொழிற்சாலை இந்திய எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் 200 பயங்கரவாதிகள்

2 mins read
1461fa6f-c221-4c54-987a-d81926503cbf
-

ஸ்ரீந­கர்: எல்­லைப் பகு­தி­யில் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில், பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீர் பகு­தி­யில் ஏரா­ள­மான பயங்­க­ர­வா­தி­கள் பதுங்கி உள்­ள­தாக மத்­திய உளவு நிறு­வ­னங்­கள் எச்­ச­ரித்­துள்­ளன.

அங்­குள்ள தீவி­ர­வாத பயிற்சி முகாம்­களில் தங்­கி­யுள்ள பயங்­க­ர­வா­தி­க­ளின் எண்­ணிக்கை நாள்­தோ­றும் அதி­க­ரித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பயிற்சி முகாம்­களில் உள்ள பயங்­க­ர­வா­தி­க­ளின் எண்­ணிக்­கை­யும் செயல்­பா­டு­களும் ஐம்­பது விழுக்­காடு அளவு அதி­க­ரித்­துள்­ளது என்­றும் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முக­மது போன்ற பயங்­க­ர­வாத அமைப்­பு­களும் அதில் உறுப்­பி­னர்­க­ளாக இருப்­ப­வர்­களும் இந்­தி­யா­வுக்­குள் ஊடு­ருவ காத்­தி­ருப்­ப­தாகவும் உளவு அமைப்­பு­கள் கூறி­யுள்­ளன.

காஷ்­மீ­ரில் பனிப்­பொ­ழிவு அதி­க­ரிப்­ப­தற்கு முன்­பாக இந்­தி­யா­வுக் குள் சுமார் இரு­நூ­ற்றுக்­கும் மேற்­பட்ட பயங்­க­ர­வா­தி­கள் ஊடு­ருவ வாய்ப்பு உள்­ள­தாக அவை தெரிவித்துள்ளன.

"ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ரின் எல்லை­யில் வசிக்­கும் பொது­மக்கள் வெளி­யேற்­றப்­பட்டு, அவர்­க­ளு­டைய வீடு­கள் தற்­கா­லிக பயங்­க­ர­வாத முகாம்­க­ளாக மாற்­றப்பட்­டுள்­ளன. அவர்­க­ளுக்­குப் பாகிஸ்­தான் ராணு­வ­மும் ஐஎஸ்ஐ உள­வுத்­து­றை­யும் பல்­வேறு உத­வி­களை அளித்து வரு­வது உறு­தி­யாகி உள்­ளது," என உள­வுத்­து­றை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

ஜம்மு காஷ்­மீ­ரின் எல்­லையை ஒட்­டி­யுள்ள மசில், கெரன், குரேஸ் ஆகிய பகு­தி­களில் உள்ள தீவி­ர­வாத முகாம்­களில் தற்­போது தீவிர பயிற்சி அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக ராணுவ வட்­டா­ரங்­களை மேற்­கோள் காட்டி இந்­திய ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

இதற்­கி­டையே இந்­திய விமானப் படை­க­ளுக்குத் தேவை­யான விமா­னங்­களைத் தயா­ரிக்க ரூ.22 ஆயிரம் கோடி மதிப்­பீட்­டில் புதிய தொழிற்­சாலை ஒன்று குஜ­ராத்­தில் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கான அடிக்­கல் நாட்­டும் நிகழ்­வில் பங்­கேற்றுப் பேசிய பிர­த­மர் மோடி, இது விமான உற்­பத்தித் துறை­யில் இந்­தியா தன்­னி­றைவு அடை­வ­தற்­கான மாபெ­ரும் முயற்சி என்­றார்.

"இந்­தியா தற்­சார்பு அடை­வதில், பாது­காப்புத் துறை­யும் விமான உற் பத்தி துறை­யும் இரு முக்­கியத் தூண்­க­ளா­கும். எதிர்­வ­ரும் 2025ஆம் ஆண்டில் பாது­காப்புத் துறை­யில் இந்­தி­யா­வின் உற்­பத்தித் 25 பில்­லி­யன் டாலரை (ரூ.2 லட்­சம் கோடி) தாண்­டும். இதற்கு உத்­த­ரப் பிர­தே­சம், தமிழ்­நாட்­டில் நிறு­வப்­படும் பாது­காப்பு வளா­கங்­கள் உதவி புரி­யும்," என்று பிர­தமர் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.