கர்ப்பிணி, குழந்தைகளைக் காவு வாங்கிய பாலம்

கர்ப்பிணி, குழந்தைகளைக் காவு வாங்கிய பாலம்

1 mins read
803ccf25-c6b4-4ff6-84b1-cf109818a880
-

அக­ம­தா­பாத்: குஜ­ராத் பாலம் விபத்­துக்­குள்­ளான நிலை­யில், அது குறித்து நெஞ்­சைப் பதற வைக்­கும் தக­வல்­கள் பல வெளி­யான வண்­ணம் உள்­ளன.

சம்­பவ பகு­திக்கு அருகே வசிக்­கும் ரமேஷ் பாய் தாம் 15 சட­லங்­களை மீட்­ட­தாக பிபிசி தமிழ் ஊட­கத்­தி­டம் தெரி­வித்தார்.

"விபத்து குறித்து தக­வல் அறிந்­த­தும் அங்கு சென்­றேன். அப்­போது ஐம்­பது பேர் பாலத்­தில் தொங்­கி­ய­படி உயி­ருக்­குப் போராடி­னர். அவர்­களை மீட்க முடிந்­த­வரை உத­வி­னேன்," என்­றார் ரமேஷ் பாய்.

சுபாஷ் என்­ப­வர் கூறு­கை­யில், கையில் கிடைத்த நீள­மான குழாய் ஒன்­றின் உத­வி­யோடு சில பெரி­ய­வர்­களை மீட்­ட­தா­க­வும் அதற்கு முன்­ன­தா­கவே சில சிறார்­க­ளைக் காப்­பாற்­றி­ய­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, தொங்கு பாலத்தை புதுப்­பித்த கட்­டு­மான நிறு­வ­னத்­தைச் சேர்ந்த ஒன்­பது பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளி­டம் விரி­வான விசா­ரணை நடந்து வரு­வ­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

மற்றொருவர் கூறு­கை­யில், ஏழு மாத கர்ப்­பி­ணிப் பெண் ஒருவர் தம் கண் முன்னே உயி­ரி­ழந்­த­தால் மன­மு­டைந்து போன­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார். மேலும் தண்­ணீ­ரில் அடித்­துச் செல்­லப்­பட்ட ஒரு சிறு­மியை மீட்டபோதி­லும், மருத்­து­வ­மனைக்கு அழைத்­துச் செல்­வ­தற்­குள் தம் கண்­முன்னே அவள் உயி­ரி­ழந்ததாகவும் மேலும் பல சிறார்கள் இறந்துபோனது வேதனை அளிப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.