பனிமூட்டம்போல் டெல்லியை மூடிய காற்று மாசு

பனிமூட்டம்போல் டெல்லியை மூடிய காற்று மாசு

1 mins read
97ea44f7-7336-4b51-b314-8f93aeb6fe99
-

புது­டெல்லி: காற்று மாசு அதி­க­ரித்து வரு­வதை அடுத்து டெல்லி வாழ் மக்­கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ள­னர்.

வழக்­கம்­போல் இந்த ஆண்டும் நாட்­டின் தலை­ந­கர் டெல்லி, அதன் சுற்­று­வட்­டா­ரப் பகு­தி­களில் காற்று மாசு அதி­க­ரித்­துள்­ளது. இத­னால் பனி­மூட்­டம் போல் அப்­ப­கு­தி­களை தூசிப்­ப­ட­லம் மூடி­யுள்­ளது.

இந்த ஆண்டு தீபா­வளி பண்­டி­கை­யின்­போது பட்­டா­சு­கள் வெடிக்க டெல்லி மாநில அரசு தடை விதித்­தது. அதை­யும் மீறி ஏரா­ள­மா­னோர் பட்­டா­சு­கள் வெடித்­ததை அடுத்து, உல­கின் ஆக அதிக காற்று மாசு உள்ள நக­ர­மாக டெல்லி மாறி­யது.

இந்­நி­லை­யில் அங்கு காற்று மாசு குறை­வதாகத் தெரி­ய­வில்லை. நேற்று காற்றுத்தரக் ­கு­றி­யீடு டெல்­லி­யில் 385 புள்­ளி­க­ளா­கப் பதி­வா­னது.

டெல்­லி­யில் உள்ள திர்­பூர் பகுதி­யில் காற்றுத்தரக் குறி­யீடு 594 புள்­ளி­க­ளா­க­வும் நொய்­டா­வில் 444 புள்­ளி­க­ளா­க­வும் பதி­வாகி உள்­ளது. இது காற்­றின் தரம் மிக­வும் மோசம் என்ற நிலையை எட்­டிப்­பி­டித்­த­தற்­கான அடை­யாளம் ஆகும். இத­னால் எதிரே இருப்­ப­வர் யார் என்­பது தெரி­யாத அள­வுக்கு காற்று மாசு மோச­ம­டைந்­துள்­ளது. வாக­னங்­களில் செல்­வோர் தடு­மாற வேண்­டி­யுள்­ளது.

இதை­ய­டுத்து, வட­இந்­தி­யா­வின் பல்­வேறு பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­படும் கட்­டு­மா­னப் பணி­கள், நிலக்­கரி ஆலை­க­ளின் செயல்­பாடு, விவ­சாய நிலங்­களை எரிக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஹரி­யானா மாநி­லத்­தில் 17 நிலக்­கரி ஆலை­களும் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் 63 ஆலை­களும் மூடப்­பட்­டன.