இலங்கை அகதிகள்: திமுக வழக்கறிஞர்கள் கேள்வி

1 mins read
6dfd47f2-d367-4fc8-8759-074be435afcd
-

புது­டெல்லி: குடி­யு­ரிமைத் திருத்தச் சட்­டத்­துக்கு எதி­ரான வழக்கு முடி­யும் வரை இந்­தி­யா­வில் உள்ள அக­தி­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்­கக்கூடாது என திமுக உள்­ளிட்ட சில தரப்­பி­னர் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இது தொடர்­பான வழக்கு நேற்று முன்­தி­னம் தலைமை நீதி­பதி யு.யு.லலித் தலை­மை­யி­லான அமர்­வில் விசா­ர­ணைக்கு வந்த­போது, இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என திமுக வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும், மத்­திய அரசு சார்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர், இந்த விவ­கா­ரம் தொடர்­பாக மொத்­தம் உள்ள 232 மனுக்­களில் அசாம், திரி­புரா மாநி­லங்­கள் தொடர்­பாக 53 வழக்­கு­கள் உள்­ளன என்­றும் அவை தொடர்­பாக பதில் அளிக்க கூடு­தல் அவ­கா­சம் வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­தார்.

திமுக தரப்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர்­கள், இலங்­கைத் தமி­ழர்­கள் தொடர்­பாக மத்­திய அரசு எந்­த­வித நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­வ­தில்லை என்று கேள்வி எழுப்­பி­ய­து­டன், இது குறித்து மத்­திய அரசு உரிய விளக்­கம் அளிக்க உத்­த­ர­விட வேண்­டும் என­வும் அறி­வு­றுத்­தி­னர்.

இதை­ய­டுத்து, சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னர் மூன்று வாரங்­க­ளுக்கு வழக்­கின் சுருக்க வாதங்­க­ளைத் தாக்­கல் செய்ய உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. மேலும், சுருக்­க­மான வாதங்­களை நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யும் நட­வ­டிக்­கைக்கு ஏது­வாக இரண்டு வழக்­க­றி­ஞர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள் என்­றும் நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.