இந்திய பொருளியலைக் கண்டு உலகமே வியக்கிறது: மோடி

1 mins read
6b4b460c-702d-44d3-a021-32ba0f736633
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லம் பெங்­க­ளூ­ரு­வில் நடக்­கும் அனைத்­து­லக முத­லீட்­டா­ளர்­கள் மூன்று நாள் மாநாட்­டின் தொடக்க நாளான நேற்று காணொளி வழி­யாக உரை­யாற்­றிய பிர­த­மர் மோடி, "உல­க­ள­வில் பொரு­ளா­தா­ரம் நிச்­ச­ய­மற்ற தன்­மை­யில் இருக்­கும் இந்த நேரத்­தில் இந்­திய பொரு­ளி­யல் வலு­வாக இருப்­பதை பார்த்து உல­கமே நம் மீது நம்­பிக்கை வைத்­துள்­ளது," என்­றார்.

"இந்­தியா உல­க­ளா­விய உற்­பத்தி சக்­தி­யாக உரு­வாகி வரு­கிறது. இந்­தி­யா­வில் முத­லீடு செய்­வது என்­பது ஜன­நா­ய­கத்­தின் முத­லீடு, உல­கத்­திற்­கான முத­லீடு.

"இந்­தி­யா­வில் அந்­நிய முத­லீடு க­ளுக்கு கத­வு­கள் திறந்தே உள்­ளன. கடந்த எட்டு ஆண்­டு­களில் ஆயி­ரக்­க­ணக்­கான நிறு­வ­னங்­கள் இந்­தி­யா­வில் முத­லீடு செய்­துள்­ளன. இந்­தியா வேக­மாக முன்­னேறி வரு­கிறது.

"துணிச்­ச­லான சீர்­தி­ருத்தங்­கள், பெரிய உள்­கட்­ட­மைப்பு வசதி, சிறந்த திற­மை­க­ளு­டன் புதிய இந்­தி­யாவை நோக்கி நகர்ந்து வரு­கி­றோம். நாட்­டின் முன்­னேற்­றத்­திற்­காக இதில் கவ­னம் செலுத்­தப்­ப­டு­கிறது. திறமை மற்­றும் தொழில்­நுட்­பம் என்­றாலே நமக்கு முத­லில் நினைவுக்கு வரு­வது பெங்­க­ளூ­ரு­தான். பாரம்­ப­ரி­யம் மற்­றும் தொழில்­நுட்­பம் இரண்­டும் உள்ள இடம் அது.

"இந்­திய இளை­ஞர்­க­ளின் திற­மையை உல­கமே வியந்து பார்க்­கிறது. இளை­ஞர்­க­ளின் திறனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் புதிய வாய்ப்­பு­களை ஆராய்­வ­தற்­கான சூழலை தரு­வோம்," என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­தார். இந்த மாநாட்­டில் மத்­திய அமைச்­சர்­கள் நிர்­மலா சீதா­ரா­மன். பியூஷ்­கோ­யல், பிர­க­லாத் ஜோஷி, ராஜீவ் சந்­தி­ர­சே­கர் உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­ட­னர்.