ஒடிசா, பீகார் உட்பட ஐந்து மாநிலங்களில் இடைத்தேர்தல்

1 mins read
7670ea4d-0e20-4429-8ea1-30fe0e3ad19c
-

புது­டெல்லி: ஒடிசா, பீகார் உட்­பட ஐந்து மாநி­லங்­க­ளுக்­கான இடைத்­தேர்­தல் தேதி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­படி, ஒடிசா, பீகார், ராஜஸ்­தான், உத்­த­ரப் பிர­தே­சம் மற்­றும் சத்­தீஷ்­கர் ஆகிய ஐந்து மாநி­லங்­க­ளுக்­கான இடைத்­தேர்­தல் வரும் டிசம்­பர் 5ஆம் தேதி நடை­பெ­றும்.

இந்த இடைத்­தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் இம்­மா­தம் 17ஆம் தேதி தொடங்­கு­கிறது. வேட்­பு­ம­னுக்­கள் பரி­சீ­லனை இம்­மா­தம் 18ஆம் தேதி நடை­பெ­று­கிறது.

வேட்­பு­ம­னுக்­க­ளைத் திரும்­பப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான இறுதி நாள் இம்­மா­தம் 21ஆம் தேதி என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இடைத்­தேர்­த­லுக்­கான வாக்கு எண்­ணிக்கை டிசம்­பர் 8ஆம் தேதி நடை­பெ­றும்.

டிசம்­பர் 10ஆம் தேதிக்­குள் இடைத்­தேர்­தல் நடத்தி முடிக்­கப்­படும்.