'விக்ரம்-எஸ்': விண்ணில் செலுத்தப்பட தயார் நிலையில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

'விக்ரம்-எஸ்': விண்ணில் செலுத்தப்பட தயார் நிலையில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

1 mins read
7e729575-64eb-4cba-961f-477620298a87
-

ஹைத­ராபாத்: இந்­தி­யா­வின் முத­லா­வது தனி­யார் ராக்­கெட், அடுத்த சில நாள்­களில் விண்­ணில் செலுத்­தப்­பட உள்­ளது.

இந்த ராக்­கெட்டை ஹைத­ரா­பாத்­தைச் சேர்ந்த 'ஸ்கை­ரூட் ஏரோஸ்­பேஸ்' என்ற துளிர் ('ஸ்டார்ட் அப்') நிறு­வ­னம் தயா­ரித்­துள்­ளது.

விண்­வெளி சார்ந்த ஆய்­வு­களை மேற்­கொள்­ளும் இந்த நிறு­வ­னம், தனது முதல் ராக்­கெட்­டுக்கு 'விக்­ரம்-எஸ்' எனப் பெயர் சூட்­டி உள்­ளது.

ஆந்­திர மாநி­லம் ஸ்ரீஹ­ரி­கோட்­டா­வில் உள்ள 'இஸ்ரோ' ஏவு­த­ளத்­தில் இருந்து இந்த ராக்­கெட் செலுத்­தப்­படும் என்­றும் அதில் மூன்று தனி­யார் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பொருள்­கள் அனுப்­பப்­பட உள்­ள­தா­க­வும் 'ஸ்கை­ரூட் ஏரோஸ்­பேஸ்' தெரி­வித்­துள்­ளது.

எனி­னும், ராக்­கெட்டை விண்­வெ­ளி­யில் செலுத்­தும் நேர­மும் நாளும் உறு­தி­பட அறி­விக்­கப்­ப­ட­வில்லை. வானி­லை­யைப் பொறுத்தே இது தொடர்­பாக முடி­வெ­டுக்­கப்­படும் என அந்­நி­று­வ­னத்­தின் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அநே­க­மாக நாளை மறுதினம் முதல் 16ஆம் தேதிக்­குள் இந்­தி­யா­வின் முத­லா­வது தனி­யார் ராக்­கெட் விண்­ணில் ஏவப்­படும் என்­றும் அதற்­கான ஏற்­பா­டு­கள் அனைத்­தும் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

"இது இந்திய விண்வெளித் துறை சார்ந்த ஆய்வுப்பணிகளில் முக்கிய மைல்கல்லாக அமையும் என துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு இந்­திய அரசு விண்­வெ­ளித் துறையை தனி­யா­ருக்­குத் திறந்­து­வி­டு­வ­தாக அறி­வித்­தது.

இதை­ய­டுத்து, பல்­வேறு பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் இத்­து­றை­யில் முத­லீடு செய்ய ஆர்­வம் காட்டி வரு­வ­தா­கத் தெரி­கிறது.