ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து வாங்குவோம்: இந்தியா அறிவிப்பு

1 mins read
2200ebe6-411b-41df-83d7-d53ea7ee5419
-

மாஸ்கோ: இந்­தி­யா­வுக்­கும் ரஷ்­யா­வுக்­கும் இடையே உள்ள உறவு வலு­வா­னது என வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

ரஷ்­யா­வுக்கு பய­ணம் மேற்­கொண்­டுள்ள அவர், மாஸ்­கோ­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில், உக்­ரேன் போரின் விளை­வு­களை ஒட்­டு­மொத்த உல­க­மும் சந்­தித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

போர் முடி­வுக்கு வர வேண்­டும் என்­பதே இந்­தி­யா­வின் விருப்­பம் என்று வலி­யு­றுத்­திய அவர், எதன் கார­ண­மா­க­வும் ரஷ்­யா­வி­டம் இருந்து கச்சா எண்­ணெய் வாங்­கு­வதை இந்­தியா நிறுத்­தாது என்று திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

"ரஷ்­யா­வி­டம் இருந்து கச்சா எண்­ணெய் வாங்­கு­வது இந்­தி­யா­வுக்கு பல வகை­யி­லும் சாத­க­மாக உள்­ளது. எனவே, இனி வரும் நாள்­க­ளி­லும் இந்­நிலை தொட­ரும்.

"கடந்த சில ஆண்­டு­க­ளாக நில­விய கொரோனா பெருந்­தொற்று நெருக்­க­டி­யா­னது உலக பொருளி­ய­லில் பாதிப்பை ஏற்படுத்தி உள்­ளது.

"இந்­நி­லை­யில், உக்­ரேன்-ரஷ்யா மோத­லால் ஏற்­பட்­டுள்ள விளை­வு­க­ளை­யும் இப்­போது பார்க்­கி­றோம். எனவே, 'இது, போருக்­கான காலம் அல்ல' என இந்­தி­யப் பிர­த­மர் கூறி­யதை, தற்­போது நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்," என்­றார் அமைச்­சர் ஜெய்­சங்­கர்.