இரு மாநிலத் தேர்தல்: கோடிக்கணக்கில் ரொக்கப் பணம், மதுபானங்கள் பறிமுதல்

2 mins read
6cdf7609-a720-43fb-9b02-347c170a41af
-

அக­ம­தாபாத்: குஜ­ராத், இமாச்­ச­லப் பிர­தேச மாநி­லங்­களில் தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில், கணக்­கில் காட்­டப்­ப­டாத ரொக்­கப் பணம், மதுபானங்­களை தேர்­தல் பறக்­கும் படை­கள் பறி­மு­தல் செய்­வது அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற்­ற­போது பறி­மு­தல் செய்­யப்­பட்ட ரொக்­கப் பணம், மது, இல­வ­சப் பொருள்­க­ளை­விட தற்­போது ஐந்து மடங்கு பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­ப­டு­வ­தாக தேர்­தல் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இது­வரை ரூ.50 கோடி ரொக்­கம் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. கடந்த முறை ரூ.9 கோடி மட்­டுமே சிக்­கி­யது. இதே­போல் இரு மாநி­லங்­களி லும் ஏரா­ள­மான மது­பா­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்டு வரு­வ­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, குஜ­ராத்­தில் இது­வரை 71 கோடி ரூபாய் உரிய ஆவ­ணங்­கள் இன்றி கொண்டு செல்­லப்­பட்­ட­போது தேர்­தல் பறக்­கும் படை­யி­டம் சிக்­கி­ய­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது. கடந்த 2017 சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லின்­போ­து ரூ.27 கோடி மட்­டும் சிக்­கி­யது.

தேர்­த­லை­ ஒட்டி குஜ­ராத்­தில் சூதாட்­டக் கும்­பல்­கள் சுறு­சு­றுப்­ப­டைந்­துள்­ளன. இம்­முறை 50 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புக்கு இணையம் வழி தேர்­தல் சூதாட்­டம் நடை­பெற வாய்ப்­புள்­ள­தாக காவல்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. இதையடுத்து காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்­கி­டையே குஜ­ராத்­தில் இரு­முறை எம்­எல்­ஏ­வாக இருந்த பாஜ­க­வின் கேசரி சிங் சோலங்­கிக்கு இம்­முறை அக்­கட்­சித் தலைமை வாய்ப்பு வழங்­க­வில்லை. இதை­ய­டுத்து அவர் ஆம் ஆத்மி கட்­சி­யில் இணைந்­துள்­ளார்.

இத­னால் பாஜ­க­வுக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே குஜ­ராத் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் பாஜக சார்­பில் போட்­டி­யிட இந்­தி­யக் கிரிக்­கெட் அணி வீரர் ரவீந்­திர ஜடே­ஜா­வின் மனைவி ரிவா­பா­வுக்கு வாய்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது. அவர் வடக்கு ஜாம் நகர் தொகு­தி­யில் கள­மி­றக்­கப்­ப­டு­கி­றார்.

இதற்­காக பிர­த­மர் மோடிக்கு சமூக ஊட­கத்­தின் மூலம் நன்றி தெரி­வித்­துள்­ளார் ரவீந்­திர ஜடேஜோ.