தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் 53,000 பேரைப் பணியமர்த்தும் 'ஃபாக்ஸ்கான்'

1 mins read
9c65cd96-d350-4627-a437-0dcd0f5b50ff
-

சென்னை: பிர­பல ஆப்­பிள் நிறு­வ­னத்­தின் மின்­னணு தயாரிப்புகளுக்கு இந்­தி­யா­வில் உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் ஃபாக்ஸ்­கான் நிறுவனம், இந்­தி­யா­வில் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் எண்­ணிக்கையை நான்கு மடங்கு அதி­கரிக்க உள்­ள­தாக தக­வல் வெளியாகியுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்­டு­களில் படிப்­ப­டி­யாக இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் எனத் தெரி­கிறது.

ஃபாக்ஸ்­கான் நிறு­வ­னத்­தின் ஆகப்­பெ­ரிய உற்­பத்தி தொழிற்­சாலை சீனா­வில் இயங்கி வருகிறது. எனி­னும் பல்­வேறு கார­ணங்­க­ளால் அங்கு உற்­பத்­திப் பணி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இதை­ய­டுத்து இந்­தி­யா­வின் பக்­கம் தன் பார்­வை­யைத் திருப்பி உள்­ளது அந்­நி­று­வ­னம்.

சீனா­வில் உள்ள தொழிற்­சா­லை­யில் சுமார் இரு­நூ­றா­யி­ரம் பேர் பணி­யாற்றி வரும் நிலை­யில் சென்­னை­யில் உள்ள ஃபாக்ஸ்­கான் நிறு­வ­னத்­தில், 17,000 ஊழி­யர்­கள் மட்­டுமே உள்­ள­னர். இந்த எண்­ணிக்கை மிக விரை­வில் 70 ஆயிரமாக அதி­க­ரிக்கப்­பட உள்­ளது. 53 ஆயி­ரம் பேர் புதி­தாக பணி­யில் சேர்க்­கப்­பட உள்­ள­தாகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.